tamilnadu

img

‘அயோத்தியாக மாறும்’ என மிரட்டல்

மண்டைக்காடு கோவிலில் ஆர்எஸ்எஸ் - பாஜக நிகழ்ச்சிகளுக்கு  தடை விதிக்கப்பட்டதால் மதவெறியர்கள் கூப்பாடு

பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் நபர்கள் கலந்து கொள்ளும், நிகழ்ச்சியை தடை செய்வது பகவதி அம்மனுக்கு எதிரானது போலவும், பகவதியம்மனை எதிர்த்தவர்கள் அநேகமாக உயிரோடு இருந்ததில்லை எனவும் கொலை மிரட்டல் விடும் தொனியில் பேசியிருக்கிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

நாகர்கோவில், பிப்.19- குமரி மாவட்டம் மண்டைக்காடு கோவிலில் ஆர்எஸ்எஸ் - பாஜக  கூட்டத்தினரின் மதவாத நிகழ்ச்சி களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மதவெறி சக்திகள் அங்கே கலவரம் நடத்துவோம் என்ற  தொனியில் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும், அமைச்சருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசித் திருவிழாவின் போது  ஹைந்தவ சேவா சங்கம் என்கிற  பெயரில் ‘சமய மாநாடு’ போர்வை யில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்திருக்கிறது. சமய நிகழ்ச்சிகள் எதையும் ரத்து செய்ய வில்லை. மாறாக, ஹைந்தவ சேவா  சங்கத்தின் பாஜக அரசியல் மற்றும்  வெறுப்புப் பேச்சுக்களைப் பரப்பும் நிகழ்ச்சியை மட்டுமே தடை செய்தி ருக்கிறார்கள். ஆனால், சமய நிகழ்ச்சிகளையே தடை செய்து விட்டதாக அந்த சங்க நிர்வாகிகளும் ஆர்எஸ்எஸ் - பாஜக வழக்கம் போலவே மோசடியாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆன்மீக நிகழ்ச்சி அல்ல

இதுதொடர்பாக, உண்மையை அம்பலப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், “ஹைந்தவ சேவா சங்கம் இந்த ஆண்டு அவர்களின் நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கும் நபர்களின் பெயர்களைப் பார்த்தாலே இது  ஆன்மீக நிகழ்ச்சியல்ல அப்பட்ட மான அரசியல் நிகழ்ச்சி என்பது  தெரியவருகிறது” எனக் குறிப்பிட்டு,  அவர்களது நிகழ்ச்சி நிரல் திட்டத்தை யும் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்படி சங்கத்தினர், மண்டைக் காடு கோவிலில் 5.3.23 அன்று பாஜக  முன்னாள் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக சட்டமன்ற குழுத்  தலைவர் நயினார் நாகேந்திரன்; 7.2.23 அன்று பாஜக ஒன்றிய கவுன்  சிலர் வி.மனோகர குமார்; 8.3.23  அன்று பாஜக இரணியல் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கே.கோபு குமார்; 10.3.23 அன்று ராஷ்டிரா சேவிகா சமிதியின் எம்.ஸ்ரீவர்தினி, ஆர்எஸ்எஸ் தர்ம ஜாக்ரான் மாநில அமைப்பாளர் இ.பரமேஸ்வரன் ஜி, இந்து ஐக்கிய வேதி மாநிலத் தலைவர் கே.பி.சசிகலா டீச்சர்; 11.3.23 அன்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனி வாசன், பாஜக முன்னாள் நாகர்கோ வில் நகர்மன்ற தலைவர் மீனா தேவ்; 13.3.23 அன்று பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, ஆர்எஸ்எஸ் சஹ பிரகாந்த் ப்ரமுக்,  குமரி மாவட்ட பாஜக மாவட்ட தலை வர் சி.தர்மராஜ், பாஜக மாவட்ட துணைத் தலைவர் பா.ரமேஷ்; 14.3.23 அன்று நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியம், இந்து முன்னணின் மாநிலப் பொதுச் செய லாளர் த. அரசுராஜா, பத்மநாப புரம் முன்னாள் எம்.எல்.ஏ வை.பாலச்  சந்தர். இந்து முன்னணி மாவட்ட ஆலோசகர் சி.சோமன், இந்து மகா  சபா துணைத் தலைவர் தா.பாலசுப்ர மணியம் ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள் என அழைப்பித ழில் குறிப்பிட்டுள்ளனர். இதை சுட்டிக்காட்டியுள்ள க.கனகராஜ், “இவர்கள் எல்லாம் அன்பைப் போதிப்பார்களா? ஆன்மீகம் வளர்ப்பார்களா? இந்து சமயத்திற்கும் இவர்களுக்கும் என்னதான் தொடர்பு? அரசியல் நோக்கம் தவிர வேறு என்ன தொடர்பு? இதைத் தடை செய்து விட்டார்கள் என்று கூக்குரலிடு கிறார்கள்” எனக் கண்டனம் தெரி வித்துள்ளனர்.

பகிரங்க மிரட்டல்

இந்நிலையில் மேற்கண்ட ஹைந்தவ சேவா சங்கத்தினர் ஞாயி றன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர். அதில், “மண்டைக் காடு அயோத்தியாக மாறிவிடக் கூடாது. மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு வேண்டாம். 5ம் தேதி இந்த நிகழ்ச்சி தடுக்கப்பட்டால் 8ம் தேதி முதலமைச்சர் கன்னியாகுமரி வர முடியாது” என்று குறிப்பிட்டு, அமைச்சர் மனோஜ் தங்கராஜூக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்தும் கண்டனம் தெரிவித்துள்ள க.கனகராஜ், “பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் நபர்கள் கலந்து கொள்ளும், நிகழ்ச்சியை தடை செய்வது பகவதி  அம்மனுக்கு எதிரானது போலவும், பகவதியம்மனை எதிர்த்தவர்கள் அநேகமாக உயிரோடு இருந்த தில்லை எனவும் கொலை மிரட்டல்  விடும் தொனியில் பேசியிருக்கி றார்கள். இதேபோன்று ஒன்றிய அமைச் சர்களை அழைப்போம்; பல மாநில ஆளுநர்களை அழைப்போம், தடுத்துப் பார்க்கட்டும் என மாநில  அரசுக்கும் அதன் மூலம் தமிழ்நாட்டு  மக்களுக்கும் மிரட்டல் விடுத்தி ருக்கிறார்கள்.  இது வன்முறையால் அரசி யல் லாபத்தை அறுவடை செய்த வர்களின் கொக்கரிப்பு. தமிழ்நாடு அரசும் காவல்துறையும்  உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் அமைதியை விரும்புகிறவர்களும் உண்மையான ஆன்மீகவாதிகளும் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பலின் இத்த கைய வன்முறையைத் தூண்டும் மிரட்டலுக்கு கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்” என்றும் கூறி யுள்ளார்.