சென்னை, டிச.22- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வங்கிகளை தனியார் மய மாக்கும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. இது வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைவர் தி. தமிழரசு மற்றும் பொதுச்செயலாளர் என்.ராஜகோபால் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொதுத் துறை வங்கிகளை தனியார்மய மாக்கும் சட்டத் திருத்தம் கொண்டு வரவுள்ளதை அடுத்து, அந்த மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரி களும் டிசம்பர் 16, 17 ஆகிய தேதி களில் 2 நாட்கள் வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டனர்.
வங்கித்துறை யின் நடவடிக்கைகள் இந்த வேலைநிறுத்தத்தால் முழுமை யாக முடங்கியது. பல ஆயிரக் கணக்கான வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பகுதிகளில் திர ளான ஆர்ப்பாட்டங்களை நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சகோதர தொழிற்சங்கங்களும், விவசாய சங்கங்களும், வங்கி வாடிக்கையாளர்களும், பொது மக்களும் இந்தப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை நல்கினர். புதனன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், திட்ட மிட்டதற்கு ஒரு நாள் முன்ன தாகவே முடிவுற்ற நிலையில் இந்த சட்டத்திருத்த மசோதா நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட வில்லை. இது வங்கி ஊழியர் போராட்டத் திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி யாகும்.
இது இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கும். விவசாய இயக்கத்திற்கும், ஜன நாயக சக்திகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. மசோதா தள்ளி வைப்பு போராட்டத்திற்கு கிடைத்த முக்கியமான வெற்றியாகும். ஆனாலும் ஒன்றிய அரசு, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை முற்றிலு மாக கைவிடவில்லை. அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் அபாயம் தொடர்கிறது. ஒன்றிய அரசு மீண்டும் இத்த கைய முயற்சியில் இறங்குமானால் அதற்கு எதிராக மிகக் குறைந்த கால அவகாசத்தில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல கட்ட போராட்டத்திற்கு தயாராகுமாறு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தனியார்மயத்தை முறியடிக்க எத்தகைய போராட்டத்திற்கும் தயாராக உள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.