tamilnadu

img

வங்கி ஊழியர்கள் பிரச்சார குழுவினருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 22- பொதுத்துறை வங்கிகளை பாது காக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது. கூட்டுறவு வங்கிகளை மாநில கட்டுப்பாட்டில் இருந்து மாற்றக் கூடாது. கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்கக்  கூடாது. மேம்பட்ட வாடிக்கையா ளர் சேவையை உறுதிப்படுத்த வேண்டும். பொதுத்துறை வங்கி களை பாதுகாக்கவும், தனியார் வங்கிகளை தேசியமயமாக்க வலி யுறுத்தியும் இந்திய வங்கி ஊழி யர் சம்மேளனம் சார்பில் வங்கி ஊழி யர்கள் தமிழகத்தின் நான்கு முனை களிலிருந்து புறப்பட்டு தமிழகம் முழு வதும் பிரச்சாரம் செய்தனர். சென்னையில் இருந்து மாநிலச் செயலாளர் எஸ்.பிரேமலதா, கோவையில் இருந்து எஸ். சிவ லிங்கம், ஓசூரில் இருந்து எஸ்.அரி ராவ், தூத்துக்குடியில் இருந்து  ஆண்டோ கால்பர்ட் ஆகியோர் தலைமையில் கடந்த ஜூலை 19 அன்று பிரச்சாரத்தை துவங்கிய இந்த குழுக்கள் 4000 கி.மீட்டர் கடந்து சனிக்கிழமை திருச்சியில் சங்கமித்தனர். சென்னையில் இருந்து புறப பட்டு காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, தஞ்சாவூர் வழியாக திருச்சி வந்த  பிரச்சார குழுவினருக்கு ஸ்ரீரங்கத் தில் சிஐடியு மாநகர் மாவட்டக் குழு  சார்பில் மாநகர செயலாளர் எஸ். ரெங்கராஜன் தலைமையில் சிறப் பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி, சிவகாசி, மதுரை, திண்டுக்கல் வழியாக திருச்சி வந்த பிரச்சார குழுவின ருக்கு மத்திய பேருந்து நிலையம் அருகில் சிஐடியு மாவட்ட தலைவர் சீனிவாசன், பிஎஸ்என்எல் ஊழியர்  சங்க செயலாளர் சுந்தர்ராஜன் தலை மையில் சிறப்பான வரவேற்பு அளிக்  கப்பட்டது. ஓசூரில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி, திருப்பட்டூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் வழியாக திருச்சி வந்த  பிரச்சார குழுவினருக்கு சமயபுரத் தில் சிஐடியு புறநகர் மாவட்டக் குழு  சார்பில் மாவட்டத் தலைவர் சம்பத்  தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்பகுதிகளில் நடந்த பிரச்சார கூட்டத்தில் இந்திய வங்கி ஊழி யர் சம்மேளனம் மாநில தலைவர்கள் எஸ்.பிரேமலதா, எஸ்.சுனில்குமார், பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார், ஆலோசகர் டி.தமிழரசு, உதவித் தலைவர் ராஜகோபால், அகில இந்திய இணைச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். பின்னர் வங்கி ஊழியர்கள் 4000  கி.மீ. பிரச்சார நிறைவு பொதுக்கூட்  டம் திருச்சி உறையூர் குறத்தெரு வில் சனிக்கிழமை மாலை நடை பெற்றது. கூட்டத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ் நாடு தலைவர் எஸ்.சுனில்குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், இந்திய வங்கி ஊழியர் சம்மேள னம் அகில இந்திய தலைவர் சி.ஜெ.  நந்தகுமார் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். சங்க பொதுச்செயலா ளர் டி.ரவிக்குமார் நன்றி கூறினார்.