tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

பான் மசாலா,  குட்கா மீதான தடை  மேலும் நீடிப்பு

சென்னை, மே 26 - உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் படி, 2013-ஆம் ஆண்டு மே 23 அன்று புகையிலை மற் றும் நிகோட்டினை சேர்ம மாக கொண்ட உணவுப் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த  தடை ஆண்டுதோறும் நீட் டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகை யிலை பொருட்களுக்கான தடையை 2026 மே 23 வரை, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

குஜராத்திற்கு  ரூ. 53,000 கோடி வாரி இறைப்பு அகமதாபாத்

, மே 26 - குஜராத்தில் ரூ. 53,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தாஹோத்தில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 9,000 குதிரைத் திறன் கொண்ட ரயில் என்ஜினையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.