அருமனை, ஜூலை 31- இடதுசாரிகளின் பாதையே சரி யான பாதை, மக்களுக்கான பாதை, இந்தியாவில் சிவப்பால் தான் சமத்து வத்தை கொண்டுவர முடியும். வேறு எந்த நபராலும் எந்த நிறத்தாலும் முடி யாது என அருமனை மக்கள் ஒற்றுமை சங்கமத்தில் பால பிரஜாபதி அடி களார் பேசினார். கன்னியாகுமரி மாவட்டம் அரு மனையில் மக்கள் ஒற்றுமை சங்கமம் முழுக்கோடு ஒய் எம் சி ஏ மைதா னத்தில் நடைபெற்றது. முழுக்கோடு ஊராட்சி மன்ற தலைவர் சி. மரிய செல்வி விலாசினி தலைமை தாங்கி னார். இதில், குமரி மக்கள் ஒற்றுமை இயக்கத்தின் மதிப்புறு தலைவர் மகா சந்நிதானம் பால பிரஜாபதி அடி களார் பேசியதாவது: இந்தியா என்பது பலதரப்பு மக்களும் வாழக்கூடிய ஒரு நாடாகும். இந்த நாட்டின் சுதந்திரப் போராட்டத் தின் போது அனைத்து தரப்பு மக்க ளும் போராடினார்கள். ஆனால், பாஜக - ஆர்எஸ் எஸ்-ஐ சேர்ந்தவர்களுக்கு இந்தப் போராட்டத்தில் பங்கு இல்லை. இவர்களுக்கு உண்மையான தேசப்பற்று கிடையாது. இந்தக் கும்பல் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கூட்டமாகும். இந்திய நாட்டில் மக்களுடைய வாழ்வாதா ரத்தை கெடுத்து, பாஜக - ஆர் எஸ்எஸ் அமைப்புகள் ஆட்சி செய்வதற்காக பொய்களையும் பித்தலாட்டங்களை யும் கூறி வருகின்றன. மக்களிடையே மூடநம்பிக்கைகளை அதிகப்படுத்தி வருகின்றன.
தேசத்தின் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் தற்போது மணிப்பூரில் நடக்கின்ற வெறியாட்டத்தை வேடிக்கை பார்க்காது. பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்ல வைப்பது, பாலியல் பலாத்காரம் செய்வது, கொலை செய்வது போன்ற செயல்களால் மணிப்பூர் மாநிலத்தின் அமைதியே சீர்குலைந்துவிட்டது. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து சேவை செய்கின்ற அமைப்புகளாக இடதுசாரி அமைப்பு கள் உள்ளன. இறைவனும் இடதுசாரி யாக உள்ளார். சொர்க்கம் என்பது நம் காலடியில் தான் உள்ளது. வேறு எங்கும் கிடைப்பதில்லை. இடதுசாரி களின் பாதையே சரியானது. அந்த பாதை மக்களுக்கானது.இந்தியாவில் சிவப்பால்தான் சமத்துவத்தை கொண்டுவர முடியும். பொது சிவில் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கக் கூடிய சட்டமாக உள்ளது. இதனை எதிர்க்க அனைத்து மக்களும் ஒன்று திரண்டு இடதுசாரிகளுடன் கை கோர்க்க வேண்டும். இந்தியாவில் இடதுசாரிகள் இருக்கும் வரை ஆர்எஸ்எஸ் பாஜகவின் சூழ்ச்சி எடு படாது. நாட்டு மக்களுக்கு மாற்றம் என்பது இடதுசாரிகள் மட்டுமே மக்களுக்கான மாற்றம். இவ்வாறு அவர் கூறினார்.
மஞ்சாலு மூடு முத்தாரம்மன் ஆலய நிர்வாகி முரளீதரன் வரவேற்றுப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ், தேமுதிக மேற்கு மாவட்டச் செயலாளர் ஐடன் சோனி, முழுக்கோடு சேகர சிஎஸ்ஐ சபை போதகர் ஜாண் பென்டிங், குழித் துறை மறை மாவட்ட அருட்பணி ஒய்சிலின் சேவியர், த மு எ க ச மாநில துணைச் செயலாளர் அ.ர.கரீம், மாவட்டத் தலைவர் ஜெயகாந்தன், திமுக மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் சல்மா, மற்றும் கிறிஸ்தவ, இந்து ஆலயங்களின் பிரதி நிதிகள், போதகர்கள், அருட்பணி யாளர்கள், குருமார்கள், கரும்பிலா விளை துதியின் தோட்டம் ஆலய போதகர் வில்சன், குமரி மக்கள் ஒற்றுமை மேடை அருமனை வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களும் ஆண் களும் குடும்பத்தோடு கலந்து கொண் டார்கள்.