திண்டுக்கல்லில் பக்ரீத் தொழுகை
திண்டுக்கல், ஜூன் 7- இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை சனியன்று கொண்டாடப் பட்டது. அதனொரு பகுதியாக திண்டுக் கல் பேகம்பூரில் உள்ள பெரிய பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடை பெற்றது. இந்த நிகழ்வில் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் தழுவி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர். இதே போல் பேகம்பூரில் யூசுப் நகர், ஜின்னா நகர் மற்றும் முகமதியா புரம், நாகல் நகர், குள்ளனம்பட்டி, மவுன்ஸ்பரன், சந்துக்கடை, ரவுண்ட் ரோடு புதூர், செல்லாண்டியம்மன் கோவில் தெரு, என்ஜிஓ காலனி உள்ளிட்ட பல பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெற்றது.