பைமாசி நிலங்கள்: அரசாணை வெளியிட்டும் 7 ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை!
பெ. சண்முகம் குற்றச்சாட்டு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கிரு ஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெ. சண்முகம் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். அப்போது, “2000 ஏக்கர் பைமாசி நிலங்களில் சாகுபடி செய்து கொண்டி ருக்கும் விவசாயிகளுக்கு பட்டா வழங்குவதற்காக கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு, தனி அலுவலகங்களை திறந்தது. அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக பட்டா வழங்கும் பணியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை” என்றார். தமிழ்நாடு அரசின் இ-சேவைகள் மூலம் பட்டா, ஏ-பதிவேடு சாராம்சங்களை பார்க்கவும், சரிபார்க்கவும் முடியும் என்றா லும், நடைமுறையில் பட்டா வழங்கும் பணி மெதுவாக நடந்து வருவது விவசாயிகள் பலரின் குறையாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார். வன உரிமை சட்டம் “வன உரிமை சட்டமானது, பல நூற்றாண்டுகளாக வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் மற்ற பாரம்பரிய வன வாசிகளுக்கும் நில உரி மையை அங்கீகரிக்கும் சட்டம். ஆனால், இதனைச் சரியாக அமல்படுத்தாதது, பல மாநிலங்களிலும் பொதுவான ஒரு பிரச்சனையாக உள்ளது” என்றார். தென்பெண்ணை ஆறு மாசுபாடு “தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தில் 112 கி.மீ. தூரமும், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பாய்ந்து இறுதியில் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதில், கர்நாடகம் கழிவுநீரை கலப்பது நீண்டகாலமாக உள்ளது. இதில், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாமிநாதன் குழு பரிந்துரைகள் வேளாண் விளைபொருட்களுக்கான விலை நிர்ணய பிரச்சனையைப் பொறுத்தவரை, எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகள், ஒன்றிய அரசால் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை” என்றும் பெ. சண்முகம் குற்றம் சாட்டினார். கமல்ஹாசன் பேச்சை அரசியலாக்கும் பாஜக நடிகர் கமல்ஹாசனின், மொழி தொடர்பான பேச்சு பற்றி, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பெ. சண்மும், “கமல்ஹாசன் கூறிய மொழி குறித்த கருத்தை, கருத்து ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும். ஆனால், பாஜக திட்டமிட்டு அதனை இரு மாநிலப் பிரச்சனையாக மாற்றியுள்ளது சரியல்ல” என்றார்.