போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுக்கோட்டை, ஜூன் 8 - புதுக்கோட்டை ஸ்ரீவெங்க டேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி புதுக்கோகாட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையுடன் இணைந்து போதைப்பொருள் பயன் பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வுப் நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்தி யது. போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக தமிழ்நாடு அரசால் மேற் கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கை யின் ஒரு பகுதியாக, பள்ளி மாண வர்களிடையே விழிப்புணர்வை ஏற்ப டுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு பள்ளியின் இயக்கு நர் ஆர்.சுதர்சன் தலைமை வகித்தார். அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.செந்தில் குமார், ஆலங்குடி மது மற்றும் அம லாக்கப்பிரிவு ஆய்வாளர் கார்த்திக் பிரியா, சிவகங்கை மாவட்ட போதைப் பெருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஏ. விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டனர். “போதையின் பாதையில் நிறைய இளைஞர்கள் பயணித்து தங்கள் எதிர் காலத்தை சீரழித்துக் கொள்கிறார்கள். விளையாட்டாக பாக்குப் போடலாம் என்று ஆரம்பித்து, அது பான் பராக் வரை வந்து நிற்கிறது. இன்றைய 90 சத வீத குற்றங்கள் போதைப் பொருள் பழக்கத்தினால் நடைபெறுகிறது. எனவே, பக்கத்து வீட்டில் போதைப் பொருட்களின் தீமையை எடுத்துச் சொல்லுங்கள்” என்று நிகழ்வில் மாண வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்வில் மாணவர்கள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். முன்ன தாக ஆசிரியை ஆனந்தி வரவேற்க, துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். போதை எதிர்ப்பு மன்றம் தொடக்கம் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், போதை எதிர்ப்பு மன்றத்தினை, மாவட்ட ஆட்சியர் மு.அருணா, துவக்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கை யில், “போதைப்பொருள் பயன்படுத்து வோர் பற்றி புகாரளிக்க 14416 என்ற எண்ணிற்கும், போதைப்பொருள் விற்பனைக் குறித்த புகாரளிக்க 10581 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். எனவே, போதைப் பழக்கத்திற்கு எதிராக தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் உரிய முறையில் பின்பற்றி, ஆரோக்கியமான நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டும்” என்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் கூ.சண்முகம், மாவட்டக் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகர், மாவட்ட புகையிலை ஆலோசகர் இரா.சுகன்யா, வட்டாட்சியர் செந்தில்நாயகி, சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) மு.பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.