சென்னை, ஏப். 10 - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ் நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மே ளனம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சிவாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேள னம் வழக்கு தொடர்ந்ததுஅந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆட்டோ சம்மேளனம்கோரிய விவரங்களையும் கவனத்தில் கொண்டுமீட்டர்கட்டணம் தீர்மானிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைப்ப தற்கான முறையில் முத்தரப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பு அமல்படுத்தபடாமலே உள்ளது. சென்னை நகரில் ஓடுகிற அனைத்து ஆட்டோக்களுக்கும் இலவசமாக ஜிபிஎஸ் மீட்டர் வழங்கப்படும் என்று அப்போ தைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அறிவிப்பும் அமலாக்க வில்லை.
இதனால் தனியார் நிறுவ னங்களான உபேர், ஓலா போன்ற வை சுயமாக கட்டணததை நிர்ண யித்து ஆட்டோ உள்ளிட்ட வாக னங்களை இயக்குகின்றன. இத னால் ஆட்டோ தொழில் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றிய மைக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்டோ க்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என 2013 ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட அரசாணை அமலாகவில்லை. பெட்ரோல் - டீசல் விலையில் நிலையற்ற தன்மை நிலவு கிறது. அவற்றின் விலையின் அடிப் படையில், ஆட்டோ உரிமை யாளர்க ளும், பயணிகளும் பயன டையும் வகையில் ஆட்டோ கட்ட ணங்களை மாற்றியமைக்க வேண்டும். கட்டணங்களை மாற்றி யமைக்க நீண்ட நடவடிக்கையை பின்பற்றாமல், பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாக மாற்றும் வகையில் மென் பொருளை பயன்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறி யுள்ளனர். எனவே, தமிழக அரசு ஆட்டோக்களுக்கு கட்டுப்படி யான கட்டணத்தை தீர்மானிக்க முன்வர வேண்டும். எரிபொருள் விலை உயர்வை மட்டும் கவன த்தில் கொள்ளாமல் விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை, குழந்தை கள் படிப்புச் செலவு, மருத்துவ செலவு, வாகன விலை உள்ளிட்ட இதர செலவுகளையும் கவனத்தில் கொண்டு மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்து அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்களை அழைத்து பேசி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்; முத்தரப்பு குழுக் களை அமைக்க வேணடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.