tamilnadu

img

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைத்திடுக!

சென்னை, மே 9 – மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்கக்கோரி செவ்வாயன்று (மே 9) தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்ட சிஐடியு ஆட்டோ சங்கங்கள் சார்பில் எழும்பூரில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம் தலைமை  தாங்கினார். அப்போது  செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டை கடந்து விட்டது. மாநில அரசு  கட்டணத்தை உயர்த்தாமல் உள்ளது.  இதனால், அதிக கட்டணம் வசூலிப்ப தாக, பொதுமக்களிடத்தில் ஓட்டுநர்க ளுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே, முதல் 1.5 கி.மீ.க்கு 50 ரூபாயும், அடுத்தடுத்த கி.மீ.க்கு 25 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும். அவ்வப்போது பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றி அமைக்க, அண்டை மாநிலங்களில் உள்ளது போல் முத்தரப்பு குழுவை அமைக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ளதற்கு மாறாக ஓலா, உபேர் நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கின்றன. இந்த செயலிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். கேரள மாநிலத்தை போன்று ஆட்டோக்களுக்கான செயலியை அரசே தொடங்கி நடத்த வேண்டும்.  சட்ட விரோதமாக செயல்படும் ரேபிடோ போன்ற பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும்; முறைப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசின் மோட்டார்  வாகன சட்டத்திருத்தத்தை நாடாளு மன்றத்தில் அதிமுக ஆதரித்தது, திமுக எதிர்த்தது. 2019 இல் கொண்டு வரப்பட்ட அந்த சட்டத்தை அதிமுக அரசு அமல்படுத்தவில்லை. ஆனால், திமுக ஆட்சி அமல்படுத்துகிறது. பல மாநிலங்களில் அமல்படுத்தாத சட்டத்தை தமிழகத்தில் ஏன் அமல்படுத்த வேண்டும்.

இதை கைவிட  வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, ஆன்லைன் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும். ஓட்டுநர்கள் புதிய ஆட்டோ வாங்கி னால் 10ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறு தியை அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்தை சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் தொடங்கி வைத்தார். துணைப் பொதுச்செயலாளர் வி.குமார் நிறைவுரையாற்றினார். கோரிக்கைகளை ஆதரித்து சிஐடியு உதவி பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் பா.பாலகிருஷ்ணன் (தென்சென்னை), சி.திருவேட்டை (மத்தியசென்னை), சு.லெனின்சுந்தர் (வடசென்னை), ஆட்டோ தொழி லாளர் சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சிவாஜி, சம்மேளன  பொதுச்செயலாளர்கள் கே.திருச் செல்வன் (டாஸ்மாக்), கே.ஆறுமுக நயினார் (போக்குவரத்து), வி.குப்புசாமி (சாலை போக்குவரத்து), நுகர்பொருள் வாணிபக்கழக சம்மேளன பொருளாளர் சண்முகம், ஆட்டோ சங்க சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஜெ.முகமதுஅனீபா, இ.உமாபதி, ஏ.பக்கிரி (தென் சென்னை), ஆர்.கபாலி, கே.பிரபா கரன் (மத்தியசென்னை), வி.ஜெய கோபால், எஸ்.செல்வராஜ், எஸ்.காதர்உசேன் (வடசென்னை), சாலை போக்குவரத்து ஊழியர் சங்க மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ், செயலாளர் ம.உதயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.