tamilnadu

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் எதேச்சதிகாரம்: பிப்.25 இல் போராட்டம்

சென்னை,பிப்.12- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வா ணையத் தலைவரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து பிப்.25 அன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக  ஆசிரியர் சங்கங்களின் போராட்டக்குழு முடிவு அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம்  முதுகலை ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்று வரு கின்றன. இத்தேர்வுக்கு, மேல் நிலைப்  பள்ளி தலைமையாசிரியர்கள் பார்வை யாளராகவும் கணினி ஆசிரியர்கள் தொழில் நுட்ப உதவியாளராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு  வாரியத்தின் தலைவரை சந்தித்த  ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினி  ஆசிரியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணி ஆணை வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், பள்ளிக் கல்வி ஆணையரிட மும் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது, அரு கிலுள்ள மாவட்டத்தில் பணி ஆணை வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார்கள். ஆனாலும் ஆசிரியர் தேர்வு வாரியம், நெடுந்தொலைவு மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் என பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம்,  தமிழ் நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரி யர்கள் கழகம், தமிழ்நாடு உயர் நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் ஆகிய சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர் தேர்வாணைய தலைவரின் ஜனநாய கமற்ற, எதேச்சதிகார செயல்படுகளை கண்டித்து கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பிப். 25 வெள்ளியன்று மாலை  மாவட்ட தலைநகரங்களில் முதன்மை  கல்வி அலுவலகத்தின் முன்பும், சென்னை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முன்பு ஆர்ப் பாட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.