கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியும் எனக் கூறி டென்னிஸ் உலகின் முன்னணி வீரர் ஜோகோவிச்சிற்கு விசா மறுத்தது ஆஸ்திரேலிய அரசாங்கம். பல்வேறு முயற்சி செய்தும் விசா கிடைக்காமல் ஆஸ்திரேலிய நாட்டின் விமான நிலையத்தில் 8 மணிநேரம் காத்திருந்தார் ஜோகோவிச். அதாவது விசா இருந்தால், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் தான் நீங்கள் யாரென்று தெரியும் என ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள் ஜோகோவிச்சை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஜோகோவிச் மீண்டும் செர்பியா திரும்பினார். மேலும் இந்த விவகாரம் அரசியல் வரை சென்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன்,”சட்டம் அனைவருக்கும் சமமானதே. சட்டத்திற்கு மேலானோர் யாரு மில்லை. எல்லைப் பாதுகாப்பில் சமரசமே இல்லை” என காட்டமாக கூறினார்.
செர்பியா ஜனாதிபதி கண்டனம்
தங்கள் நாட்டின் டென்னிஸ் நட்சத்திரம் அவமதிக்கப்பட்டுவிட்டதாக செர்பியா ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வூஸுக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். அதில்,”விசா விவகாரத்தில் தரக்குறைவாக நடத்தப்பட்ட பிரச்சனை, இதுதொடர்பாக சர்வதேச பொதுச் சட்டத்துக்கு உட்பட்டு ஜோகோவிச்சுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நீதி கோரப்படும்” என பதிவிட்டிருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய அரசு செர்பியா ஜனாதிபதி கண்டனத்தை கண்டுகொள்ள வில்லை. எங்களது சட்டப்பணி நிறை வடைந்துவிட்டது (ஜோகோவிச் வெளி யேற்றம்). அதனால் மேற்கொண்டு பேச எதுவுமில்லை என்ற நோக்கில் செர்பியா வின் கண்டத்திற்கு பதில் எதுவும் கூறாமல் ஆஸ்திரேலியா அமைதியாக உள்ளது.
கோபத்தில் இருந்த ஆஸ்திரேலிய அரசு
மருத்துவ அறிக்கையை காரணமாக காட்டி எப்படியாவது ஆஸ்திரேலிய அரசிடம் விசா பெற்றுக்கொள்ளலாம் என கனவு கண்ட ஜோகோவிச் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பொய்யான தகவலை வெளியிட்டார். அதில் “தடுப்பூசி விவகாரத்தில் தனக்கு மருத்துவ விலக்கு கிடைத்துவிட்டது” எனக் கூறி யிருந்தார். நாங்கள் எந்த விலக்கும் கொடுக்க வில்லை என்பதை வெளிக்காட்டாமல் கோபத்தில் இருந்த ஆஸ்திரேலிய அரசு, விமானநிலையத்தில் ஜோகோவிச் காண்பித்த மருத்துவ அறிக்கையை என்னவென்று சோதனை செய்யவில்லை. தடுப்பூசி சான்றிதழ் மட்டுமே கேட்டுள் ளார்கள் விமான நிலைய அதிகாரிகள். இதனால் தான் 8 மணிநேரம் காத்திருந்தார் ஜோகோவிச். ஆனால் ஜோகோவிச்சை அடைத்து வைக்கவில்லை என ஆஸ்தி ரேலிய அரசாங்கம் விளக்கம் அளித்துள் ளது. செர்பிய தலைநகர் பெல்கிரேடில் ஜோகோவிச்சிற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக கோஷங் களும் எழுந்துள்ளன. ஒரு விளையாட்டு பிரச்ச னை தற்போது நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையாக முளைத்துள்ளது.
புரோ கபடி
இன்றைய ஆட்டங்கள்
புனே - பெங்கால் (இரவு 7:30)
பெங்களூரு - உத்தரப்பிரதேசம் (இரவு 8:30)
இரண்டு ஆட்டங்களும் கர்நாடகா தலைநகரம் பெங்களூருவில் நடைபெறுகிறது