tamilnadu

img

அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா துவங்கியது...

அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிமாதம் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருவிழாக்கள் நடைபெற தடை உள் ளது. இதன் காரணமாக ஆடி பிரம்மோற்சவம் நிகழ்ச்சிகள் அனைத்தும் அழகர்கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேற்படி 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளியன்று கொடி யேற்றும் நிகழ்ச்சி காலை 7.15 மணிக்கு நடைபெற்றது. பின்னர்   காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள்  சுவாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர்.

;