games

img

துவங்கியது டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா....  

டோக்கியோ
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் தொடரின் 32-வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிறப்பு ஏற்பாடுகளுடன் வெள்ளியன்று மாலை 4:30 மணிக்கு (இந்திய நேரப்படி) ஜப்பான் பேரரசர் நருகிட்டோ மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவர் தாமஸ் பாச் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

கொரோனா அச்சத்துக்கு இடையே கோலாகலமாக தொடங்கிய இந்த ஒலிம்பிக் திருவிழாவின் துவக்க நிகழ்வில் பல்வேறு வண்ணங்களில் அதிக பொருட்செலவுடன் சிறப்பு வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. மேலும் ஜப்பான் பாரம்பரிய மற்றும் இதர கலை நிகழ்வுகள் லேசர் வண்ண தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமாக நிகழ்த்தப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. 

;