tamilnadu

img

கோவை விமான நிலையம் வழியாக கடத்திய தங்கம்

பெரிந்தல்மன்னா, நவ.30- கோவை விமான நிலையம் வழியாக கடத்தி வரப்பட்ட தங்கத்தை  கொள்ளை யடிக்க  முயன்ற 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. கேரள-தமிழ்நாடு நெடுஞ்சாலை களை குறிவைத்து வாகனங்களில் தங்கம் கடத்துவோரை குறிவைத்து தாக்கி  கொள்ளையடிப்பது வழக்கமாக நடந்து  வருகிறது. கடந்த 26ஆம் தேதி கோவை  விமான நிலையம் வழியாக வெளிநாட்டில் இருந்து தாயகம் வந்த காசர்கோடு பகுதி யை சேர்ந்தவர்கள் ஒரு கிலோ தங்கத்தை உடலில் மறைத்து கடத்திச் சென்றனர். இரண்டு கார்களில் வந்த ஒரு கும்பல் இந்த தங்கத்தை கொள்ளையடிக்க முயன்றது. ஆனால், அப்பகுதியினர் தலையிட்டதையடுத்து, அந்த கும்பல் கொள்ளை முயற்சியை தவிர்த்துவிட்டு காரில் தப்பிச் சென்றது. இதையடுத்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பெரிந்தல்மன்னா காவல்துறையினர் காசர்கோட்டை பூர்வீகமாக கொண்டவர் களை முதலில் தடுத்து வைத்தனர். பின்னர் கடத்தப்பட்ட தங்கம் கைப்பற்றப் பட்டது. தொடர்ந்து நடந்த சோதனையில் கொள்ளை கும்பல் சிக்கியது. அதில் முஹம் மது ரஷாத் (30), அப்துல் அஜீஸ் (31), முஹம்மது பஷீர் (40), சாதிக் (27), அல்தாப் பக்கர் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.