சென்னை, அக்.28- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. சென்னை தி.நகர், தெற்குபோக் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில தலைமை அலுவலகம் (பாலன் இல்லம்) அமைந்துள்ளது. அலுவலகத்தின் பின்புறம் டாக்டர் தாமஸ் சாலையில் தமிழ்நாடு நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடி யிருப்பு உள்ளது. இந்த பகுதியில் இருந்து சிலர் வெள்ளியன்று (அக்.27) முன்னிரவில் கட்சி அலுவலகத்திற்குள் கற்கள், காலி கண்ணாடி பாட்டில்களை வீசி யுள்ளனர். அலுவலக காவலருடனும் தகராறிலும் ஈடுபட்டுள்ளனர். இதன்மீதான புகாரின்பேரில், சுற்றுக் காவல் வந்த மாம்பலம் காவல் நிலைய காவலர்கள் தாமஸ் சாலை யில் இருந்தவர்களை எச்சரித்துச் சென் றனர். அதன்பிறகும், மீண்டும் கட்சி அலுவலகத்திற்குள் கற்கள் மற்றும் காலி மது பாட்டில்களை வீசியுள்ள னர். சிபிஐ, சிபிஎம் கண்டனம் இது பரபரப்பை ஏற்படுத்திய நிலை யில், கட்சி அலுவலகத்தின் மீது நடத் தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்தது. கட்சி அலுவலகத்தின் மீது தாக்கு தல் நடத்திய சமூக விரோதிகளின் சட்ட விரோதச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த குற்றச் சம்ப வத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனை வரையும் கைது செய்து,
சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண் டிக்கும் வகையில் உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும். தாக்கு தலின் பின்னணி குறித்து முழுமை யாக விசாரிக்க வேண்டும் என்று வலி யுறுத்தியது. அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வும், சிபிஐ அலுவலகம் மீதான தாக்கு தலுக்கு தனது கண்டனத்தைத் தெரி வித்தது. சிபிஐ மாநிலக்குழு தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தின் மீது அக்.27 இரவு தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய விசாரணை மேற்கொண்டு கடுமை யான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த தாக்குதலுக்கான பின்னணி குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறோம் என்று தெரி வித்தது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எதிர்க்கட்சி தலைவர்கள் எடப்பாடி கே.பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள் ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர். இதன் பின்னணியில் 6 பேரை அழைத்து சென்று விசாரித்த காவல் துறையினர், அலெக்ஸ் (வயது 22), பாரதி (வயது 20), அருண்குமார் (வயது 38), பார்த்திபன் (வயது 21) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.