தூத்துக்குடி அருகே சமூக விரோதிகள் அட்டூழியம்
தூத்துக்குடி, ஏப். 25- தூத்துக்குடி மாவட்டம் புதுக் கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியா புரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (56). தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருகிறார். வழக்கம்போல செவ்வாயன்றும் தனது அலுவலகத்தில் பணியில் இருந்த பொழுது பிற்பகலில் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் லூர்து பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்பு லன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்ட லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசார ணையில் மணல் கடத்தலைத் தடுத்த கார ணத்திற்காக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொல்லப் பட்டுள்ளார் எனத் தெரிய வந்தது. மேலும் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய இருவரில் ஒருவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட விஏஓவிற்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேர்மையான விஏஓ
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பிரான்சிஸ் குடும்பத்தினரை ஆட்சியர் செந்தில் ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் ஆட்சியர் கூறும் போது, “கொலை செய்யப்பட்ட லூர்து பிரா ன்சிஸ் ஆதிச்சநல்லூர் பகுதியில் 4 ஆண்டுகள் விஏஓவாக பணியாற்றி யுள்ளார். மேலும் அங்கு அருங்காட்சி யகம் அமைக்க நிலங்களை மீட்டு கொடுத்துள்ளார். மிகவும் நேர்மையாக வும் துணிச்சலுடனும் பணியாற்றியவர். தற்போது முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் தொடர்புடைய வர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரது குடும்பத்தின ருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள் கிறேன்” என்றார்.
ஒருகோடி ரூபாய் நிவாரணம் : முதல்வர் அறிவிப்பு
பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி, கருணை அடிப்படையில் அவ ரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி யில், “லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் பணியிலிருக்கும்போது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தினை அளித்துள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, ராமசுப்புவின் மீது லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகா ரின் பேரில், கடந்த வாரம் மணல் கடத் தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு அவரை வெட்டியதாகத் தெரிய வருகிறது.
இதுகுறித்து, காவல் துறையின் மூலம் உரிய மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. தம் கடமையை முறையாக நிறை வேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்பு ணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது. இக்கொடிய சம்பவத்தில் உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் அவர்கள் குடும்பத்தி னருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை யும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தின ருக்கு அரசு சார்பாக உடனடியாக முத லமைச்சரின் பொது நிவாரண நிதி யிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுத வியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தர விட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.