திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரி சின்னத்துரை மற்றும் அவ ரது சகோதரியை கொலை முயற்சி செய்த குற்றவாளிகள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியாளர்கள் சாதியப் பாகுபாடு களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். மாணவர்கள் சாதிய அடை யாளத்தை வெளிப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சனிக்கிழமை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.சுடலைராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், திராவிட தமிழர் கட்சியின் மாநிலச் செய லாளர் கதிரவன், சிபிஐ மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ரங்கன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் செயலாளர் துரை பாண்டியன், தமிழர் உரிமை மீட்புக் கள ஒருங்கிணைப்பாளர் லெனின் கென் னடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முருகன் கண்ணா, மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறு வனர் மாரியப்ப பாண்டியன்,
பூர்வீக தமிழர் கட்சிப் பொதுச் செயலாளர் ராஜ் குமார், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மக்கள் அதி காரம் செயலாளர் கிங்சன், மனித நேய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செய லாளர் நிஜாம், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அருள்ராஜ் , ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்ட தலைவர் ஆர்.மது பால், மாதர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் முத்துமாரி, மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டத் தலைவர் பெருமாள், வழக்கறிஞர் கு.பழனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. செந்தில், பி.என். இசக்கிமுத்து, பிஎஸ் என்எல் செல்வராஜ், மாமன்ற உறுப்பி னர் முத்து சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலப்பாளை யம் பகுதிக் குழுச் செயலாளர் குழந்தை வேலு திருநெல்வேலி தாலுகா செய லாளர் துரை. நாராயணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.முருகன் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்டனர்.