tamilnadu

img

ஆதீன மடங்கள் ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறிவிடக் கூடாது

மதுரை, ஜூன் 6- மோடி ஆட்சிக்கு ஆதீனங்கள் வக்கால த்து வாங்கினால் ஆன்மீகப் பணி ஆர்எஸ்எஸ் பணியாக மாறும் அபாயம் ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.  மதுரையில் திங்களன்று அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் விஎச்பி ஆதரவோடு நடை பெற்றுள்ள துறவியர் மாநாட்டில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும், கம்யூனிஸ்ட்கள் ஆபத்தானவர்கள் என்றும் பேசியுள்ளனர். கம்யூனிஸ்ட்டுகளை விட நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் வேறு யாரும் இருக்க  முடியாது. தியாகிகளைப் பார்த்து ஆதீ னங்கள் அவதூறு பேசுவது கண்டிக்கத் தக்கது. முஸ்லிம்களை தீவிரவாதிகள் எனக் கூறியிருப்பதும் கண்டிக்கத்தக்கது.  ஆதீனங்கள் ஆன்மீகப் பணியை மட்டுமே செய்ய வேண்டும். ஆன்மீகவாதிகள் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்குள் சென்றுவிட்டார் களோ என்று எண்ணத் தோன்றுகிறது. மடங்கள் ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறிவிடக் கூடாது. ஆதீனங்கள் ஆன்மீகப்பணியை விட்டு ஆர்எஸ்எஸ் பணியில் ஈடுபட்டால் அனைவரும் தங்களது அரசியல் பணியைச் செய்ய களமிறங்குவார்கள். கோவில் நிலங்களை தங்களிடம் ஒப்ப டைக்க வேண்டுமென ஆதீனங்கள் கூறுகின் றன. ஏற்கனவே ஊழல், முறைகேடு நடைபெற்றதால் தான் அறநிலை யத்துறையே உருவாக்கப்பட்டது. அறநிலை யத்துறையால் தான் கோவில்களைப் பாது காக்க முடியும். மதுரை ஆதீனத்திற்கு நிலங்கள் எப்படி வந்தது? அவர் யார் யாரு க்குக் கொடுத்துள்ளார் என்று விவாதிக்கத் தயாரா? கோவில்கள் அரசிடம் இருப்பதுதான் பாதுகாப்பானது. ஏனெனில் கோவில்கள் வெறும் கோவில்கள் மட்டுமல்ல; அது கலை,  பண்பாடு, கலாச்சாரம் சார்ந்தது. மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் மதுரை ஆதீனம் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

ஆய்வு என்றால் அச்சப்படுவது ஏன்?

சிதம்பரம் நடராஜர் கோவில் தணிக்கை க்கு அதிகாரிகள் வருகிறார்கள் என்றால் வேண்டாம் என்கிறார்கள். எதற்கு வரு கிறீர்கள் எனக் கேள்வியெழுப்புகிறார்கள்.  பதற்றம் அடைகிறார்கள். ஏன் ஆய்வுக்கு அச்சப்பட வேண்டும்? ஆய்வுக்கு வர வேண்டாம் எனக் கூறுவதில் ஏதோ ஒரு உள்நோக்கம் உள்ளது. கோவில் நிலங்களில் இரண்டு, மூன்று தலைமுறைகளாக வசிப்பவர்களுக்கு இடத்தை  பட்டா போட்டு கொடுக்க வேண்டும். நான்கு  தலைமுறைகளாக விவசாயம் செய்பவர்களிட மிருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு சொந்தமாக்கவேண்டும்.

நீச்சல் பயிற்சி தருக!

கல்குவாரிகள், மணல் குவாரிகளை அரசு கண்காணிக்க வேண்டும். நிர்ணயித்த அளவைவிட தோண்டுவதை தடுக்க வேண்டும்.  கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற ஏழு பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். தடுப்பணை கட்டப்பட்ட இடத்தின் அருகில் மணல் கொள்ளை  நடைபெற்ற தகவல்கள் வருகிறது. சமீப காலங்களில் ஆற்றில் மூழ்கி, கல்குவாரிகளில் குளிக்கச் சென்று உயிரிழப்பது தொடர்கிறது. மாணவ-மாணவிகள் உயிரிழப்பைத் தடுக்க பள்ளிகளில் நீச்சல் பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும். கடலூரில் உயிரிழந்த ஏழு பேருக்கு தமிழக முதல்வர் நிவாரணம் வழங்கியுள்ளார். விழுப்புரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு  நிவாரணம் வழங்கவில்லை. அவர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். கிரானைட் குவாரிகளை தனியாருக்குக் கொடுத்ததால் எவ்வளவு கோடி இழப்பீடு ஏற்பட்டது என்பதை முன்னாள் மதுரை ஆட்சியர் உ.சகாயம் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். அதன் மூலம் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

கருவிலேயே அழிக்கும் பயங்கரம்

17-வயதுச் சிறுமியின் கரு முட்டை விற்கப் பட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. இதற்கு அவரது தாயாரே உடந்தையாக இருந்துள் ளார். தாயார் மட்டுமல்ல, மருத்துவர்களும் உடந்தையாக இருந்தால் தான் இதைச் செய்ய முடியும். கரு முட்டையை அகற்றுவது கொடூரமான, வலி நிறைந்த பணி. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதேபோல் தமிழகத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் மூலம் தெரிந்துகொண்டு அது பெண் குழந்தை என்றால் கருவிலேயே அழிக்கும் செயலை மீண்டும் தொடங்கியுள்ளார்கள். எனவே  இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் விற்பனை, கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க  தமிழக முதல்வர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதிமுக ஆட்சியில் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை கட்டுக்குள் இல்லை. செடியாக இருந்தபோது கிள்ளியெறி யாததால் அது மரமாக வளர்ந்துவிட்டது. இந்த  மரத்தை கோடரி கொண்டு வெட்டும் வேலையை தொடர வேண்டும்.

அதிகரிக்கும் குடும்ப வன்முறை

குடும்ப வன்முறையால் 80 சதவீதம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் காவல்  நிலையத்தில் புகாரளித்தால் சமரசம் செய்யக் கூடாது. புகார்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப வன்முறைக்கு எதிராக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பாதாளச் சாக்கடை பணியின்போது உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது.  மதுரை மாநகராட்சி தூய்மைப் பணி யாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொறி யியல் பிரிவு என்று அனைத்துத்துறை பணியா ளர்களும் தொகுப்பு ஊதியம் மற்றும் ஒப்பந்த  பணியாளர்களாக உள்ளார்கள். இவர்களுக் கான ஊதியம் அரசு நிர்ணயித்தது ரூ.14 ஆயிரம் என்றால் அதில் பாதியைத்தான் ஒப்பந்த தாரர்கள் வழங்குகிறார்கள்.  எனவே இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாத்திட வேண்டு மென்றால் ஒப்பந்த முறையை கைவிட்டு மாநகராட்சியே இப்பணிகளை ஏற்று நடத்த வேண்டும்  மேலும் தொகுப்பூதியத்தில் இருப்பவர்களையும் காலமுறை ஊதியத்தில் கொண்டுவரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.