அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாண வர்கள் சேர்க்கை நடைபெறும். நடப்பு ஆண்டு(2024)க்கான மாணவர் சேர்க்கையை மே 8 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளனர். www. tngasa.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய லாம். விண்ணப்பக்கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக்கட்டணம் ரூ.2 என்று ரூ.50 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பட்டியலின(எஸ்.சி) மற்றும் பழங்குடி(எஸ்.டி) மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பதிவுக்கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். இணைய தளங்கள் வாயிலாக பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
வேலை தரும் சைபர் பாதுகாப்பு
தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் பயன் களைத் தரும் அதே வேளையில், அவற்றைத் தவறாகப் பயன்படுத்து பவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, இணைய தளங்களில் ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன. பலரும் நம்பி தங்கள் பணத்தை இழந்துள்ளனர். முறைகேடுகளைத் தடுப்பதற்காகப் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்வதில் நிறுவனங்கள் முனைப் பாக உள்ளன. அந்த ஏற்பாடுகளில் சைபர் பாதுகாப்பு அலுவலர்களின் பங்களிப்பு முக்கியமானது. இத னால் சைபர் பாதுகாப்புத்துறையில் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு பெற்றிருப்பவர்களுக்கு கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. பட்டயப்படிப்பைப் படிக்க பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானதாகும். பட்டப்படிப்புக்கு +2 முடித்திருக்க வேண்டும்.
பெரும் வாய்ப்பைத் தரும் 7.5 விழுக்காடு
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் படித்திருந்தால் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியானவர்களாவர். அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு கிடையாது. கலந்தாய்வுக்குச் செல்கையில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் பயின்றதற்கான அத்தாட்சிக் கடிதத்து டன் செல்ல வேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்க லைக்கழகம் நடத்தும் வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் இந்த 7.5 விழுக்காடு பொருந்தும்.
அஞ்சல் வழியில்...
குடும்பப் பொருளாதாரச்சூழல் அல்லது ஏதா வது வேலைக்குப் போக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் அஞ்சல் வழியில் தொலைதூரக் கல்வியில் இணைந்து படிக்கலாம். அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகியவறறில் ஏதா வது ஒரு படிப்பைத் தேர்வு செய்து கொள்வது, அரசு வேலைகளுக்குத் தயார் செய்யவும் உதவும். கிட்டத்தட்ட அனைத்து அரசு வேலைகளுக்கும் தொலைதூரக் கல்வியில் பயின்று பெறும் பட்டங்க ளையும் ஏற்றுக் கொள்கிறார்கள். பள்ளிப்படிப் பின்றி, நேரடியாகத் தேர்வு எழுதி பட்டம் வாங்கும் திறந்தநிலைப் பல்கலைக்கழகச் சான்றிதழைத்தான் ஏற்றுக் கொள்வதில்லை.
எட்டாக்கனியைப் பறிக்கும் “எட்டு”
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயின்று, ஒன்பதாம் வகுப்பில் சேருவதற்காக மாணவர்கள் பள்ளிகளைத் தேடிக் கொண்டிருக்கும் காலமிதுவாகும். தனியார் பள்ளிகளில் சேர விரும்பியவர்கள் கிட்டத்தட்ட தங்கள் சேர்க்கையை நிறைவு செய்து கொண்டிருப்பார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளும் தங்கள் சேர்க்கையை நிறைவு செய்து கொண்டிருக்கின்றன. அரசுப்பள்ளிகளில் பெருமபாலானவை இன்றும் கதவுகளை திறந்து வைத்துள்ளன. அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மாநில அரசு அளித்துள்ளது. சில பெற்றோர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு சிலர் தரும் வழிகாட்டுதல்களும் அப்படிப்பட்டதாக இருக்கின்றன. அரசாணை தெளிவாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்குதான் இந்த இட ஒதுக்கீடு கிடைக்கும். இன்றைய தேதிவரையில் அதுதான் இருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அந்த இடஒதுக்கீடு கிடைக்காது. தங்கள் குழந்தைகளுக்கு இந்த 7.5 விழுக்காடு அவசியம் என்று நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலேயே ஒன்பதாம் வகுப்பில் சேர்ப்பது நல்லது. எட்டு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களை மேலும் நாலு எட்டுகள் அங்கேயே எடுத்து வைக்கச் சொல்வது எட்டாக்கனியைப் பறிக்க உதவும்.
பத்துக்குப் பிறகு பாலிடெக்னிக்
பத்தாம் வகுப்பு நிறைவு செய்து விட்டு வேலைவாய்ப்பு அல்லது தொழில் ரீதியான படிப்பைப் படிக்க விரும்புவர்கள் பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து கொள்ளலாம். சிவில் பொறியியல், இயந்திர பொறியியல், ஆட்டோமொபைல் பொறியியல், கணினி அறிவியல் பொறியியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மின் பொறியியல் மற்றும் பெட்ரோ இரசாயன பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. அரசு பாலிடெக்னிக்குகளில் மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு ரீதியாகவும் சேர்க்கை நடப்பதால் அங்கு சேருவதற்கு மாணவர்கள் முன்னுரிமை அளிக்கலாம்.