tamilnadu

முதன்மைச் செயலாளருக்கு பிடியாணை உத்தரவு

முதன்மைச் செயலாளருக்கு பிடியாணை உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக அவமதிப்பு வழக்கு

சென்னை, ஜூன் 21 - அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை  செயல்படுத்த தவறியதால், பல்கலைக் கழக ஊழியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் முறையாக ஆஜராகாமல் அலட்சியம் காட்டியதால், சென்னை உயர்நீதிமன்றம் உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப்  யாதவுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. 2007 இல் கலைஞர் ஆட்சியில் உரு வான ஐந்து அண்ணா யுனிவர்சிட்டி ஆப்  டெக்னாலஜிகள், 2011-இல் அதிமுக ஆட்சி யில் ஒரு சட்டத்தின் கீழ் ஒன்றாக இணைக்கப் பட்டன. ஆனால் அந்த மண்டல பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய ஊழியர்களின் சேவை இதுவரை முழுமையாக ஒருங்கி ணைக்கப் படவில்லை. திருச்சி, கோயம் புத்தூர் மண்டலங்களில் பணியாற்றி வந்த  பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில், ஊழியர்களை சம்பளப்  பாதுகாப்புடன் பணியில் இணைக்க நீதி மன்றம் ஆணையிட்டது. இதனை நிர்வா கம் செயல்படுத்தாததையடுத்து அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி பட்டு தேவானந்த், முதன்மைச்  செயலாளர் பிரதீப் யாதவ் உறுதிச்சான்று (Affidavit) தாக்கல் செய்ய உத்தரவிட்டி ருந்தார். ஆனால் ஜூன் 16, 2025 அன்று  வழக்கு விசாரணைக்கு வந்த போது, எந்த  உறுதிச்சான்றும் தாக்கல் செய்யப்பட வில்லை. அரசுத் தரப்பில் எந்த வழக்கறிஞ ரும் முறையாக ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி பட்டு தேவா னந்த், “முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் மீது பிடியாணை பிறப்பிக்க உத்தர விட்டார். சென்னை மாவட்ட காவல் ஆணையர், அடுத்த விசாரணை நாளான ஜூன் 30 அன்று, அவரை நீதிமன்றத்தில் ஆஜராகச் செய்ய வேண்டும் என அறி வுறுத்தப்பட்டுள்ளது.