அரியலூர், ஜூலை 16- அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி நிஷா தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ரயில்வே காலனி தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவர் குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவ ரது மனைவி உமாராணி. இவர்களது மகள் நிஷா. இவர் 2020- 21ஆம் கல்வி ஆண்டு பொதுத் தேர்வில் 535 மதிப்பெண்கள் எடுத் துள்ளார். நீட் தேர்வுக்காக கடந்த வருடம் தயார் செய்து தேர்வு எழுதினார் . ஆனால் தேர்ச்சி பெறவில்லை. இதனையடுத்து இவ்வருடமும் நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்து தன்னை தயார்ப்படுத்தி வந்துள்ளார். இந் நிலையில் நாளை (ஞாயிறு) நீட் தேர்வு எழுத உள்ள நிலையில் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை மாணவி யின் பெற்றோர்க்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதுகுறித்து அரியலூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப் பற்றி உடற் கூராய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினரின் விசார ணையில் மாணவி கைப்பட எழுதிய கடி தத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் நிஷா தனது பெற்றோர் மற்றும் தம்பிக்கு உருக்கமாக எழுதியுள்ளார்.இந்த கடி தத்தை காவல்துறையினர் அவர்களது பெற் றோர் மற்றும் உறவினர்களுக்கு வாசித்துக் காட்டி கடிதத்தை எடுத்துச்சென்றனர். மாணவி நிஷாவின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வரு கின்றனர். அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் இதுவரை 4 மாண வர்கள் தற்கொலை செய்து கொண்டிருப் பது குறிப்பிடப்பட்டது.