tamilnadu

img

புதிய ரயில் நிறுத்த வளாகம் அமைத்திட ஒப்புதல் வழங்கிடுக!

கோயம்புத்தூர், செப். 11- கோவை சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய ரயில் பெட்டிகளை நிறுத்தி பராமரிக்க, பிட்  லைன் அமைத்திட புதிய ரயில் நிறுத்த  வளாகம் அமைத்திட ஒப்புதல் அளித்திட வேண்டுமென கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ரயில்வே வாரிய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். தென்னக ரயில்வேயில் அதிக வருமா னம் ஈட்டும் நிலையங்களில் கோயம் புத்தூர் சந்திப்பு மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்தகைய சிறப்பு மிக்க பகுதியில் இருந்து புதிய ரயில்கள் இயக்க கோரிக்கைகள் வைக்கும் போதெல்லாம் ரயில்வே நிர்வாகம், கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் நிறுத்திட போதிய இடவசதி இல்லாததால் புதிய ரயில் கள் அறிவிக்க இயலவில்லை என்கிற காரணத்தை சொல்வி வருகிறது.  இதனால், கோவை சந்திப்பு ரயில்  நிலையத்திற்கு அருகில் உள்ள  போத்தனூர் சந்திப்பு ரயில் நிலை யத்தில் பெட்டிகள் நிறுத்துமிடம் மற்றும் பராமரிப்பு மையம் அமைத்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆனா லும், இக்கோரிக்கை, இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.  சமீபத்தில் சேலம் ரயில்வே கோட்டம் இதற்கென அனுப்பிய முன்மொழி வுகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிகிறேன்.  போத்தனூர் ரயில் நிலையத்தில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்துமிடம் மற்றும் பராமரிப்பு மையம் 3 பிட் லைன்கள் மற்றும் 4 ஸ்டேபிலிங் லைன்களுடன் அமைத்திட தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஒப்பு தலுடன், ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குநர் (பணிகள்) அவர்க ளுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு இன்னும் நிலுவையில் உள்ளது.  ரயில் பெட்டிகள் நிறுத்துமிடம் மற்றும் பராமரிப்பு மையம் புதிதாக அமைத்திடாமல், கோவையில் இருந்து புதிய ரயில்கள் சாத்தியம் இல்லை என்ற சூழல் உள்ளது. எனவே, கொடுக்கப்பட்ட முன்மொழிவுகள் மீது  விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன். மேலும், இதனை நடை முறைப்படுத்துவது குறித்து எடுக்கப் பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க  வேண்டும் என அதில் தெரிவித் துள்ளார்.