tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு முகாம் நடத்திய சு.வெங்கடேசன் எம்.பி.க்கு பாராட்டு விழா

மதுரை, ஜூன் 29-  மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்காக 15 மையங்களில் சிறப்பு முகாம்  நடத்தி, பல்வேறு உபகரணங்களை வழங்கிய  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், அலுவலர்களுக்கு மதுரையில் ஜூன் 29 வியாழனன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு மாவட்ட தலைவர் பி. வீரமணி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஆ.பாலமுருகன் முன்னிலை வகித்தார்.  மாவட்ட துணைச்செயலாளர் -மாமன்ற உறுப் பினர் டி. குமரவேல் வரவேற்றுப் பேசினார். மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி,  அருட்தந்தை பெனட்டிக் பர்ணபாஸ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் மா.கணேசன்,

துணை மேயர் டி.நாக ராஜன், சிறப்பு பள்ளி நிறுவனர் எஸ்.விசா லாட்சி, சேதுபதி உயர்நிலைப்பள்ளி செயலா ளர் எஸ்.பார்த்தசாரதி, மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல்வாழ்வு சங்க தலைவர் எஸ். பூபதி, மாற்றுத்திறனாளிகள் தடகள பயிற்சி யாளர் ஜே. ரஞ்சித் குமார் நியான்சந்த், கலை  டிரஸ்ட் நிறுவனர் ஜெ.பிரபாகர், பார்வை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு மாவட்ட செயலாளர் என்.பாரதி, காது கேளாதோர் வாய் பேசாத அமைப்பின் மாநிலச் செயலா ளர் எம்.சொர்ணவேல் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட பொருளாளர் பி. ஜோதிபாசு நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், அமைப்பின் நிர்வாகிகள் வி.மாரியப்பன், பி.பழனியம்மாள், ஏ.பாண்டி, பி.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  சு.வெங்கடேசன் எம்.பி. நடத்திய சிறப்பு  முகாம்களில் 18 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ ருக்கு அடையாள அட்டை, ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பேருந்து, ரயில் பய ணத்திற்கான இலவச பாஸ், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உதவித்தொகை, 2 ஆயி ரத்து 700க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன என்  பது குறிப்பிடத்தக்கது.