tamilnadu

img

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாயகமாக திகழ்ந்த புதுச்சேரி

புதுச்சேரி, ஆக. 7- சுதந்திரப் போராட்ட வீரர்க ளின் தாயகமாக புதுச்சேரி திகழ்ந்தது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார். புதுச்சேரி ஜிப்மர் மருத்து வமனை உள்ளிட்ட அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங் கேற்பதற்காக  இரண்டு நாள் பயணமாக திங்களன்று (ஆக.7) வருகை தந்த குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதல்வர் ரங்க சாமி பூங்கொத்து கொடுத்து  வரவேற்றார். பின்னர் ஜிப்மர் ஏ.பி.ஜே.  அப்துல் கலாம் கலையரங் கத்தில் நடைபெற்ற விழா வில் ரூ. 17 கோடியில்  ஜிப்மர் மருத்துவமனைக்கு வாங்கப் பட்டுள்ள புற்றுநோய்க்கான நவீன கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரத்தை துவக்கி வைத்தார். மேலும், வில்லி யனூரில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்து வமனையை திறந்து வைத்தார். இந்த இரு நிகழ்ச்சியில் பேசிய அவர்,“ புதுவையில் வசித்தவர்கள் சுதந்திர போராட்டத்தின் போது இந்திய மக்களுக்குச் சமமாக செயல்பட்டனர். புதுவை சிறந்த எழுத்தாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்க ளின் தாயகமாக திகழ்ந்துள் ளது”என்றார்.

பாரதிதாசன் இங்கு பிறந் தவர்.மகாகவி பாரதியார் இங்கு வசித்து சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். வி.வி.எஸ்.ஐயர் சிறந்த தமிழ் அறிஞர், சுதந்திரப் போராட்டத்தில் புதுவையில் தங்கி பங் கேற்றார். புதுவையின் அர சியல், சமூகவியல் அசா தாரணமானது என்றும் அவர் கூறினார். புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தி யங்களும், மொழியால் வேறுபட்டாலும் வேற்று மையில் ஒற்றுமை என்ற கலாச்சாரம், பாரம்பரி யத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. புதுவையின் கட்டிடக்கலை, திருவிழாக் கள், வாழ்க்கை முறை பல்வேறு தாக்கங்களை பிரதிபலிக்கிறது. பிரான்ஸ், இந்தியா இடையிலான நட்புறவு பால மாக புதுவை விளங்குகிறது. கல்வியறிவில் புதுவை முத லிடத்தில் உள்ளது பாராட் டுக்குரியது. புதுவைக்கு பல்வேறு பகுதிகளிலி ருந்தும் மாணவர்கள் மேல் படிப்புக்காக வந்து செல்கின் றனர் என்றும் அவர் தெரி வித்தார். விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், முதலமைச்சர் ரங்க சாமி,  சட்டப் பேரவைத் தலைவர் செல்வம்,  அமைச்ச ர்கள்  நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், ஜெயக்குமார், சாய் சரவணன், சந்திர பிரியங்கா, ஜிப்மர் இயக்கு நர் ராகேஷ் அகர்வால், தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா, ஆட்சியர் வல்லவன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், ஜிப்மர் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற் றனர்.