சென்னை,மே 3- அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியி யல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி, அழகப்பா செட்டி யார் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய நான்கு கல்லூரி களிலும் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி துணை இயக்கு நர், துணை நூலகர் போன்ற பிற பணியாளர் பணியிடங்க ளுக்கு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்படைத் தன் மையுடன் தேர்வு குழுக்க ளால் தேர்வு செய்யப்பட்ட 161 நபர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள் ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் அடையாளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் புதனன்று (மே 3) சென்னை தலைமை செயலகத்தில் 10 நபர்க ளுக்கு பணிநியமன ஆணை களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் க. பொன்முடி மற்றும் அரசு உயர் அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.