சென்னை, மார்ச் 17- தமிழகத்தில் 17 காவல் துறை ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- ஒன்றிய அரசுப் பணியில் இருந்து திரும்பிய ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க், தென் மண்டல ஐஜியாக நியமனம் செய்யப் பட்டுள்ளார். இதற்கு முன்பு, தென் மண்டல ஐஜியாக இருந்த அன்பு, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே அங்கு பணியாற்றி வந்த சந்தோஷ் குமார், நெல்லை மாநகர ஆணையராக நியமனம் செய்யப்பட் டுள்ளார். சென்னை வடக்கு சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமார், மதுரை மாநகரா காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை காவல் ஆணையர் ஏ.டி.துரை குமார், அமலாக்கத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி மல்லிகா காவல்துறை விரிவாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் சம்பத்குமார், காவல்துறை நலன்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை ஐஜி துரைக்குமார் பதவி உயர்வு பெற்று ரயில்வே காவல்துறை ஏடிஜிபியாக நியமிக் கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி பாலநாகதேவி, காவல்துறை செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ஜெயராம், ஊர்க்காவல் படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஜி அபின் தினேஷ் மொடக் பதவி உயர்வு பெற்று பொருளாதார குற்றப்பரிவு ஏடிஜிபி யாக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஐஜி செந்தாமரைக் கண்ணன் பதவி உயர்வு பெற்று அதே துறையின் ஏடிஜிபியாக நியமி க்கப் பட்டுள்ளார். ஊர்க்காவல்படை ஐஜி வனிதா, பதவி உயர்வு பெற்று ரயில்வே காவல்துறை ஏடிஜிபியாக நியமிக்கப் பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் குமார் பதவி உயர்வு பெற்று காவல்துறை நவீனமய மாக்கல் துறையின் ஏடிஜிபியாக நியமிக்கப் பட்டுள்ளார். ஒன்றிய அரசுப் பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் ஆயுஷ் மணீ திவாரி, மகேஷ்வா தயாள், சுமித் சரண் ஆகியோர் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.