tamilnadu

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கோரிக்கை

சென்னை, மார்ச் 2- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும், அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கடந்த 9  ஆண்டுகளாகப் பணி நியமனம்  பெற முடியாமல் தவித்துக்  கொண்டிருக்கும் ஆசிரியர்க ளுக்கு உடனடியாகப் பணி நியமனம் வழங்க வேண்டும், அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும்.  25 ஆண்டுகளுக்கு முன்பு  ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றும், அதன் பின்பு ஆசிரியர்  தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணி நியமனம் பெற முடியாமல் சிக்கித் தவிக்கும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய தமிழக  அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  

தற்போது வேலைவாய்ப்பக முன்னுரிமையையும் பின்பற்றா மல், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதையும் கணக்கில் கொள்ளாமல் ஆசிரியர் தகுதித்  தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்கென மீண்டும் ஒரு நியமனத் தேர்வை  எழுத வேண்டும் என அரசாணை: 149 வெளியிடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும் தமிழ்நாட்டில் எந்தவொரு அரசுப் பணி நியமனத்திற்கும் இப்படி பல தேர்வுகள் நடத்தப் படவில்லை. இது வேலையில்லா மல் தவிக்கும் பல்லாயிரக்கணக் கான பயிற்சி பெற்ற ஆசிரியர்க ளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். தற்போது தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களும் காலியாக உள்ளன.  

எனவே, அரசுப் பள்ளி மாணவர்க ளின் கல்வி நலன் கருதியும் அப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டிய தேவை  உள்ளது. மேலும், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் கள் எண்ணிக்கை பெருமள வில் உயர்ந்துள்ளன. அதனடிப் படையில் அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் கூடுதல் தேவைப் பணியிடங்கள் உருவாகியுள்ளன. அவ்வாறு உருவான பள்ளிகளுக்குப் புதிதாக ஆசிரியர் பணியிடங் களை அளித்து, அப்பணியிடங் களில் உடனடியாக ஆசிரியர் நியமனம் செய்து அரசுப் பள்ளிக ளின் மாணவர்கள் எண்ணிக் கையைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், மாணவர்கள் எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்கும் தமிழக அரசு  வழிவகை செய்திட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28.02.2022 முதல் சென்னையில் டி.பி.ஐ  வளாகத்தில் தொடர் உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வரும்  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கி றோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.