நாங்குநேரி ஏ.எஸ்.பி துணை ஆணையராக நியமனம்
ருநெல்வேலி, ஜூன் 11- தமிழ்நாடு காவல் துறை யில் நிர்வாக சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, 6 டி.ஐ.ஜி. க்கள், 12 போலீஸ் சூப்பிரண் டுகள் உள்ளிட்ட 18 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நாங்குநேரி ஏ எஸ் பி பிரசன்னகுமார் பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர துணை ஆணைய ராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர மேற்கு துணை ஆணையராக இருந்த கீதா, சேலம் மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார்.