tamilnadu

தேர்தல் ஆணையர் நியமன மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் மோடி அரசு!

புதுதில்லி, செப். 14 - நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்  தொடருக்கான நிகழ்ச்சி நிரலை ஒரு வழியாக மோடி அரசு வெளி யிட்டுள்ளது.  5 அமர்வுகள் மட்டுமே நடை பெறும் இந்த சிறப்புக் கூட்டத் தொட ரில், வழக்கறிஞர்கள் (திருத்த) மசோ தா 2023, அஞ்சல் அலுவலக மசோ தா, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் பத விக்காலம்) மசோதா 2023, அச்சு  ஊடகம் மற்றும் பதிவுகள் மசோதா - 2023 என மொத்தம் 4 மசோதாக் களை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. “இவற்றில் தலைமைத் தேர்தல்  ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) மசோதா- 2023” மிக முக்கியமான மசோதாவாகும். 2024 மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது பற்றி யோசனையில் ஈடுபட்டுள்ள மோடி அரசு, அதற்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தை முழுமையாக தங்களின் கைப்பாவையாக்கிக் கொள்ளும் மறைமுகத் திட்டத்துடன் இந்த மசோதாவைக் கையில் எடுத்துள்ளது.

சுதந்திரமாக செயல்பட முடியாத தேர்தல் ஆணையம்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை நியமிப்பதற்கு இருப்பது போல, தேர்தல் ஆணை யர்களை நியமிப்பதற்கும் ‘கொலீ ஜியம்’ போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில், கடந்தாண்டு வழக்கு கள் தொடரப்பட்டன. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டம்- 1991-இன் பிரிவு 6-இன் படி, தேர்தல் ஆணையர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்தியாவில் கடந்த 18 ஆண்டு களில் 14 தலைமைத் தேர்தல் ஆணை யர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஒரு வர் கூட 6 ஆண்டு பதவியை முழுமை யாக வகிக்கவில்லை. இதனால் தேர்தல் ஆணையர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது என்று குறிப்பிட்டே உச்சநீதிமன்றத் தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. 

தனிச்சட்டம் இயற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

கே.எம். ஜோசப் தலைமை யிலான உச்சநீதிமன்ற அமர்வும், இந்த வழக்குகளை விசாரித்து, 2023 மார்ச் அன்று தீர்ப்பு வழங்கியது.  அதில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நாடாளு மன்றம் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அதுவரை “பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலை மை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு, தலைமைத் தேர்தல் ஆணை யர் மற்றும் தேர்தல் ஆணையர் களைத் தேர்வு செய்யும்” என்று தீர்ப்பளித்தது. “தலைமைத் தேர்தல் ஆணை யரின் செயல்பாட்டில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. நன்ன டத்தையுடன் சுதந்திரமாக செயல் படும் தலைமைத் தேர்தல் ஆணை யர் இருக்க வேண்டியது நாட்டிற்கு முக்கியம். தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், பிரதமர் மீது கடுமையான குற்றச் சாட்டுகள் கூறப்பட்டாலும் சுதந்திர மாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பவராக இருக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் ‘தலை ஆட்டுபவராக இருக்கக் கூடாது’ என்பதன் அடிப்படையில் தேர்தல் ஆணையர்களை நியமிக்க சுதந்திரமான அமைப்பு வேண்டும்” என்று நீதிபதி கே.எம். ஜோசப் அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மசோதாவில் மோடி அரசின் நயவஞ்சகம் இந்நிலையில், இந்த தீர்ப்பு வெளி யாகி 5 மாதங்களுக்குப் பிறகு, கடந்த ஜூலை 20-இல் துவங்கி, ஆகஸ்ட் 11 வரை நடைபெற்ற மழைக் காலக் கூட்டத் தொடரில், தலை மைத் தேர்தல் ஆணையர் மற்றும்  தேர்தல் ஆணையர்கள் (சேவை  நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) மசோதா 2023-ஐ ஒன்றிய பாஜக அரசு அறிமுகம் செய்தது. ஆனால், நயவஞ்சகமாக என்ன  செய்தது என்றால், தேர்வுக் குழு விலிருந்து தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, (1) ​​பிரதமர்- தேர்வுக் குழு தலைவராக இருப்பார்; (2)  மக்களவை எதிர்க்கட்சித் தலை வர், (3) பிரதமர் பரிந்துரைக்கும் ஒன்றிய அமைச்சர் ஆகிய 2 பேர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வார்கள். அவர்களின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்பார்” என்று அறிவித்தது. அதா வது எதிர்க்கட்சித் தலைவர் பெயரள விற்கே இருப்பார். ஏனைய இரண்டு பேரில் ஒருவர் பிரதமர்; மற்றொரு வர் பிரதமரால் நியமிக்கப்படுபவர் என்பதால், மூன்றில் இரண்டு  உறுப்பினர் என்ற பெரும்பான்மை யின் படி, பாஜக யாரை விரும்பு கிறதோ, அவர்கள்தான் தேர்தல் ஆணையர்களாக வருவார்கள்.

பெயரளவிற்கே எதிர்க்கட்சித் தலைவர் - தேடல் குழு

முதலில் சட்ட அமைச்சரவைச் செயலாளரின் தலைமையில் ஒரு தேடல் குழு  (தேர்தல் தொடர்பான விஷயங்களில் அறிவும் அனு பவமும் உள்ள - செயலாளர் பத விக்குக் குறையாத இரண்டு உறுப் பினர்கள்) ஐந்து பேர் கொண்ட பட்டி யலைத் தயாரிக்க வேண்டும். அந்த  பட்டியலில் இருந்து தகுதியான வர்களை, பிரதமர் தலைமையிலான, எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மக்களவையில் தனிப்பெரும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரத மரால் பரிந்துரைக்கப்படும் ஒன்றிய அமைச்சர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு தேர்தல் ஆணை யர்களாக தேர்வு செய்யும். இதில், மோடி அரசு செய்த மற்று மொரு ஏமாற்று வேலை என்ன வென்றால்,  தேடல் குழு பரிந்து ரைத்த பட்டியலில் இடம்பெறாத வர்களையும் பிரதமர் தலைமை யிலான குழு பரிசீலனைக்கு எடுத்து கொள்ள அதிகாரம் உண்டு என்பது தான். கடந்த கூட்டத் தொடரில், மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதே இதற்கு எதிர்ப்பு எழுந்தது. சிறப்புக் கூட்டத் தொடரில் சட்டமாக்கிட தீவிரம் இந்நிலையில்தான், செப்டம்பர்  18 துவங்கி 22 வரை நடைபெறவுள்ள சிறப்புக் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரலை ரகசியமாக வைத் திருந்த மோடி அரசு, செப்டம்பர் 6-ஆம் தேதி காங்கிரஸ் நாடாளு மன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கமாகவே கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டபோதும், நிகழ்ச்சி நிரலை வெளியிடாத மோடி அரசு, புதன்கிழமையன்று (செப்.13) மாலை நிகழ்ச்சி நிரலை வெளியிட்டுள்ளது. அதில், 1. வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, 2. அஞ்சல் அலு வலக மசோதா, 3. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமன பணி நிலை மசோதா, 4. அச்சு ஊடகம் மற்றும் பதிவுகள் மசோதா என மொத்தம் 4 மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாகதெரிவித்துள்ளது. இவற்றில், வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா- 2023, அச்சு  ஊடகம் மற்றும் காலப் பதிவு மசோதா - 2023 ஆகியவை ஏற்கெனவே மாநிலங்களவையில் ஆகஸ்ட் 3  அன்றே நிறைவேற்றப்பட்ட மசோதா க்களாகும். அஞ்சல் அலுவலக மசோதா மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இவற்றை மக்களவை யில் நிறைவேற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ளது.