திருவனந்தபுரம், நவ. 25 - கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கக்கோடி குடும்ப சுகாதார மையம் நாட்டிலேயே முதல் ஆன்டிபயாடிக் சீர்மிகு (ஸ்மார்ட்) மருத்துவமனையாக மாறியுள்ளது. இதேபோல கேரளம் முழுவதும் ஆன்டி பயாடிக் ஸ்மார்ட் மருத்துவமனைகள் நடை முறைக்கு வரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கக்கோடி குடும்ப சுகாதார மையம் நாட்டின் முதல் ஆன்டிபயாடிக் சீர்மிகு மருத்துவமனையாக மாறியிருப்பதற்கு, கக்கோடி குடும்ப நல மைய மருத்துவர் மற்றும் குழு உறுப்பினர்கள், மாவட்ட ஏஎம்ஆர் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து, அமைச்சர் பேசினார். அப்போது அவர், “ஆன்டிபயாடிக் சீர்மிகு மருத்துவமனை களுக்கான வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (ஆன்டிபயாடிக்) அதிகமாகப் பயன்படுத்து வதைத் தடுப்பதற்கான 10 வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் மருத்துவமனைகள், ‘ஆன்டி பயாடிக் சீர்மிகு மருத்துவமனைகள்’ என குறிப்பிடப்படுகின்றன. அனைத்து மருத்துவ மனைகளையும் சரியான நேரத்தில் ‘ஸ்மார்ட்’ மருத்துவமனைகளாக மாற்றுவதே இதன் நோக்கம். நோயை உருவாக்கும் பாக்டீரியா (நுண்ணுயிர்) என்பது உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாகும். எனினும், நுண்ணுயிர் எதிர்ப்பு களின் அதிகப்படியான மற்றும் தேவையற்ற பயன்பாட்டைத் தடுக்க, மாநில அரசு ஒரு அறிவியல் செயல் திட்டத்தை வகுத்துள்ளது. ‘ஆன்டிபயாடிக் கல்வியறிவு கேரளா’ என்பதே அந்த குறிக்கோள். ஏஎம்ஆர் குழுக்கள் நாட்டி லேயே முதல் முறையாக கேரளத்தில் மாவட்ட அளவிலும் ஒன்றிய அளவிலும் அமைக்கப் பட்டுள்ளன. ‘ஆன்டிபயாடிக் கல்வியறிவு கேரளம்’ மற்றும் ‘சீர்மிகு மருத்துவமனை’ ஆகி யவை கேரளாவின் கருத்துக்களாகும். இதை செயல்படுத்தும் வகையில் மாநிலத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரள ஏஎம்ஆர் கண்காணிப்பு வலை யமைப்பில் பல மருத்துவமனைகள் இணைந்துள்ளன. இதைத் தவிர வேறு சில மருத்துவமனைகளும் உள்ளன. அவற்றையும் கண்காணிப்பு வலையமைப்பின் ஒரு பகுதியாக மாற்ற மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வரு கிறது. 2023 ஆகஸ்ட்டில் தொகுதி அளவிலான ஏஎம்ஆர் குழுக்களுக்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான அரசாணையை அரசாங்கம் வெளியிட்டது. ஒருவார கால நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாநிலத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.