சென்னையில் புதனன்று (டிச. 28) நடைபெற்ற நிகழ்ச்சியில் ”நீட்” விலக்கு மசோதா: தாமதம் ஏன்? ஜனநாயகம் காக்க விழித்தெழுவோம்” என்ற நூலை பொதுபள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட பேராசிரியர்கள் பி.ரத்தினசபாபதி, ப.முருகையன், கணேசன், வே.மணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சென்னை, டிச. 28- கல்வி வணிகமயமாவதை தடுக்கும் போராட்டமே நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் என்று பொது பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார். சென்னையில் புதனன்று (டிச. 28) நடைபெற்ற”நீட்” விலக்கு மசோதா: தாமதம் ஏன்? ஜனநாயகம் காக்க விழித்தெழுவோம்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: “நீட்” விலக்கு சட்ட மசோதா குறித்து ஒன்றிய உள்துறை அமைச்ச கம் வடிவமைத்துள்ள கேள்வி களும், அதற்கான பதில்களாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும், ஆயுஷ் அமைச்சகமும் வெளிப்படுத்தி யுள்ள கருத்துகளும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைக் கோட்பாட்டை மாற்றிடும் வகையில் உள்ளது. இது ஒரு மசோதா குறித்த சிக்கல் மட்டுமல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான இறை யாண்மை பெற்ற, சமயச்சார்பற்ற, சமதர்ம ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகும்.
நீட் விலக்கு மசோதாவிற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற நடக்கும் போராட்டம், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போராட்டமோ அல்லது ஒன்றிய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையே நடக்கும் போராட்டமோ அல்ல. கல்வி மற்றும் மருத்துவச் சேவையைத் துறைகளை, தனியார் தனது சொந்த லாபத்திற்காக முழுமையாக அபகரிக்க எடுக்கும் முயற்சியை தடுக்க நடக்கும் போராட்டம். வணிகச் சந்தையின் கட்டுப்பாட்டில் கல்வியும், மருத்துவமும் முழுமையாக செல்ல அனுமதிக்கக் கூடாது என்பதற்கான போராட்டம். ஒன்றிய அமைச்சகங்கள் அனுப்பிய கேள்வி மற்றும் பதிலில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக் களை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைத்து முழுமையான விவாதத்தை நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மாநில அரசின் இறையாண்மைக்கு உட்பட்டு நிறை வேற்றப்பட்ட சட்ட முன்வடிவிற்கு மேலும் காலதாமதம் இன்றி குடிய ரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு மக்களின் “நீட்” விலக்கு கோரிக்கைக்கு ஆதர வாகவும், தமிழ்நாடு சட்ட முன்வடி விற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் இந்தியா வின் பிற மாநிலச் சட்டப் பேரவை களிலும் தீர்மானத்தை நிறைவேற்ற, அந்தந்த மாநில அரசுகளை தமிழ் நாடு அரசு வலியுறுத்த வேண்டும். மாபெரும் மக்கள் இயக்கத்தை? உருவாக்கி இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் மக்களாட்சி மாண்புகளை காத்திட முன்வர வேண்டும் என்று அனைத்து அரசி யல் கட்சிகளையும் கேட்டுக் கொள் கிறோம். கல்வியையும் ஜனநாயகத் தையும் காத்திடவும், “நீட்” விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தி அவருக்கு மனு அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நூலை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட, பேராசிரியர்கள் பி.ரத்தினசபாபதி, ப.முருகையன், கணேசன், வே.மணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.