tamilnadu

சிபிஎஸ்இ 10, 12-க்கு பருவ பொதுத் தேர்வு அறிவிப்பு

சென்னை, மார்ச் 12- கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டில் (2021-22) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 2 பருவங்களாக நடத்த சிபிஎஸ்இ திட்டமிட் டது. அதன்படி, முதல் பருவத்தேர்வு நவம்பர் - டிசம்பரில் நடத்தப்பட்டது. இந்நிலை யில், 2-வது பருவ பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை சிபிஎஸ்இ வெளி யிட்டுள்ளது. அதன்படி, 12 ஆம் வகுப்புக்கான 2ஆவது  பருவ பொதுத் தேர்வு ஏப்.26 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம்தேதி முடிவடைகிறது. தேர்வுகள் தினமும் காலை 10.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும். 10 ஆம் வகுப்புக்கான 2ஆவது பருவ பொதுத் தேர்வு ஏப்.26 ஆம் தேதி தொடங்கி மே 24-ம் தேதி முடிவடைகிறது. தேர்வுகள் காலை 10.30 முதல் 12.30 மணிவரை நடை பெறும். ஒருசில தேர்வுகள் மட்டும் காலை 10.30 முதல் 11.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.