tamilnadu

அண்ணாமலை அரசியல் தமிழகத்தில் எடுபடாது: கே.எஸ்.அழகிரி

சென்னை, மார்ச் 25- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விருதுநகரில் 22 வயது பெண் சம்பந்தப்பட்ட பலாத்கார வழக்கில் தமிழக முதல்வர் நேரிடையாக தலையிட்டு விசார ணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தர விட்டிருக்கிறார். மேலும் தவறு செய்வோ ருக்கு பாடமாக இருக்கும் வகையில் தண்டனையை பெற்றுத் தருவோம் என்று சட்டப்பேரவையில் உறுதி கூறியி ருக்கிறார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டி ருக்கிறார்கள். விசாரணையை தமிழக டிஜிபி நேரடியாக கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்கை விசாரிக்க சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர்கள் வினோதினி மற்றும் முத்தரசி ஆகியோர் நியமிக்கப்பட்டி ருக்கிறார்கள். 60 நாட்களில் குற்றப் பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட வேண்டுமென்று முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். இதன் மூலம் விசாரணை நியாயமாகவும், துரித மாகவும் நடைபெறும் என்பதில் எவ ருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. விருதுநகர் பாலியல் பலாத்காரம் குறித்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக பாஜகவுக்கு எந்த உரிமையும் இல்லை. பாஜக தலைமை அலுவலுகமான கமலா லயத்தில் நடக்கிற பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விசாகா குழு அமைக்கப்படும் என்று தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கருத்து கூறியதாக செய்தி வெளிவந்தது. அதுகுறித்து தமிழக பாஜக எடுத்த நடவடிக்கை என்ன?  தொடர்ந்து நடைபெற்று வருகிற அனைத்து தேர்தல்களிலும் பிரதமர் மோடியையும், தமிழக பாஜகவையும் மக்கள் நிராகரித்து வருவதை போல எதிர் காலத்திலும் நிராகரிக்கவே செய்வார்கள். எனவே, தமிழக பாஜக தலைவர் அண்ணா மலையின் அரசியல் தமிழகத்தில் எந்த வகை யிலும் எடுபடாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.