இரண்டு தலைவர்களை மோத விடும் வகையில், ‘முத்து ராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர்தான் அறிஞர் அண்ணா’ என்று பாஜக தலைவர் அண்ணா மலை கூறியது கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அறிஞர் அண்ணாவை கொச்சைப் படுத்தினால் அதிமுக தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெய குமார் ஏற்கெனவே அண்ணாமலை க்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அதிமுக-வின் மற்றொரு முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூவும் மறைமுகமாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத் துள்ளார். “அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும்” என சாபம் விட்டுள்ள செல்லூர் ராஜூ, “எப்பேர்பட்ட அரசி யல் கட்சிக்கு தலைவராக இருந்தா லும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசு வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் கூறியுள்ளார்.