அனிதா அன்று பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டு இருந்தாள். பள்ளிக் கூடத்திற்கு அனுப்பாமல் கல்யாணத்திற்கு அழைத்துச் செல்வதனால் அவளுக்கு கூடுதல் மகிழ்ச்சி. நேரமாக எழுப்பியதற்குக் கூட அன்று அவள் கோபித்துக் கொள்ளவில்லை. வேக வேகமாகக் குளித்து முடித்து பட்டு பாவாடையை உடுத்திக் கொண்டாள். அவளுக்கு கல்யாண வீட்டில் தரப்போகும் ஐஸ்கிரீமை நினைத்து வாயில் கொஞ்சம் எச்சில் கூட ஊறியது . பள்ளிக்கூடம் போவதற்குக் கிளம்பு வது என்றால் சட்டென்று கிளம்பாத அனிதா அன்று எல்லோருக்கும் முன்னரே கிளம்பிவிட்டாள். அப்பாவிடம் ஓடிப்போய் “ஏனுங்கப்பா கல்யா ணத்துக்கு இன்று போகப்போகிறோம் என்பதை நேற்றே ஏன் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நான் எனது உடைக்கு மேட்சாக பூவெல்லாம் வாங்கி இருப்பேன்” என்றாள். “உங்களைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டு நானும் அம்மாவும் மட்டும் போகலாம் என்று இருந்தோம். அந்தக் கல்யாணத்தைப் பார்ப்பது ரொம்ப புண்ணியம் என்று ஊர் பெரியவர் சொன்ன தால் தான் உன்னையையும் தம்பியையும் கூட்டிப் போகிறேன். சரி சரி பேசிக்கிட்டே இருக்காதே தம்பி ரெடியாகி விட்டானா என்று போயிப்பாரு” என்றார் அனிதாவின் அப்பா சுந்தர்.
அனிதாவும் அவள் தம்பி மாதவனும் குடும்பத்தோடு கோயிலுக்குப் புறப்பட்டனர். அந்தச் சமயத்தில் பக்கத்து வீட்டு நண்பன் வெற்றியும் குடும்பத்தோடு கிளம்பி இருந்தான். அனிதாவிற்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. என்னடா நீங்களும் கிளம்பிட்டீங்க என்றாள் ஆச்சரியமாக. உடனே அவன் கல்யாணத்துக்குப் போகிறோம் என்றான். நாங்களும் கல்யாணத்துக்குத் தான் போறோம் என்றாள் அனிதா. சரி சரி பேசிக்கிட்டே இருக்காதீங்க எல்லோ ருமே விஜயபுரி அம்மன் கோயிலுக்குத் தான் போகி றோம் என்று சுந்தர் சொன்னபோது நண்பர் களுக்குப் பெரும் மகிழ்ச்சி. இரண்டு குடும்பமும் கோயிலுக்குக் கிளம்பிச் சென்றன. கோவிலைச் சுற்றி எல்லா பக்கமும் நீண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. வண்டிகளை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது அங்கு சென்று வண்டியை நிறுத்திவிட்டு கோயிலை நோக்கி நடந்தனர். எங்கு பார்த்தாலும் சீரியல் பல்புகள் அழகழகான பல வடிவங்களில் ஒளிவீசி கொண்டிருந்தன. மக்கள் கூட்டம் கூட்ட மாகச் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர். அதை கண்ட அனிதாவிற்குப் புதுவித அனு பவமாக இருந்தது. இது என்ன கோயில் விசேஷம் போல தெரியுது என்று எண்ணிக் கொண்டு சுந்தரி டம் “என்னங்க அப்பா கல்யாணத்திற்குப் போக லாம் என்று கூறிவிட்டுக் கோவிலுக்கு அழைத்து வந்து விட்டீர்களே” என்று கேட்டாள். அப்பா புன்முறுவலோடு கல்யாணத்திற்குத் தாண்டா வந்திருக்கிறோம். ஆனா இது வித்தியாச மான கல்யாணம் என்று கூறினார். என்னங்க அப்பா சொல்றீங்க வித்தியாசமான கல்யாணமா அப்படின்னா என்ன என்று சிரித்தவாறு அப்பா வை அண்ணாந்து பார்த்து கொண்டே கேட்டாள். இது மனிதர்களுக்கு நடக்கும் கல்யாணத்தைப் போல் மரங்களுக்கு நடக்கும் கல்யாணம் என் றார்.
அவர் சொல்வதை அனிதாவைப் போல் அனிதாவின் தம்பியும் அனிதாவின் நண்பன் வெற்றியும் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்பா சொன்னதைக் கேட்டு மூவரும் வாயைப் பிளந்தனர். என்னது மரத்துக்கும் மரத்துக்கும் கல்யாணமா என்று ஒரே சமயத்தில் கேட்டனர். ஆச்சரியத்தில் மூவரும் அதே இடத்தில் நின்று விட்டனர். இல்லை உறைந்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். மூவரும் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த சுந்தர் சரி சரி சொல்கிறேன் வாங்க என்று கோவிலை நோக்கி அழைத்துச் சென்றவரே பேசிக்கொண்டு போனார். “என்னங்கப்பா சொல்லுறீங்க! மரத்துக்கும் மரத்துக்கும் கல்யாணமா ?எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் இதை எல்லாம் கேள்விப் பட்டதே இல்லை. எப்படிக் கல்யாணம் நடக்கும்” என்று ஆட்சியத்தோடு அப்பாவிடம் புரியும்படி விவரமாச் சொல்லுங்களேன் என்றாள். “மழை பெய்து பல ஆண்டுகள் ஆனதால் குளம் குட்டை எல்லாம் வற்றிப் போய்விட்டது. நம்ம ஊர் மட்டுமல்லாமல் சுற்று வட்டார ஊர்களிலும் மழை இல்லாம பெரும் வறட்சி ஏற்பட்டு இருப்பதால் ஊர் பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு செய்தனர். அம்மன் கோயிலுக்குள் இருக்கும் விநாயகர் சிலை அருகே அரச மரத்தையும் வேப்ப மரத்தை யும் ஒன்றாக வைத்துத் திருமணம் செய்து வைத்தால் நன்றாக மழை பெய்யும் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்களாம். அதன்படி பல ஊர்க்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்து மரங்களுக்குகா கல்யாணம் செய்து வைக்கலாம் என்று பேசி முடிவு செய்தனர். அதன்படி தான் இன்று மரங்களுக்குக் கல்யாணமும் செய்து வைக்கப் போகிறார்கள்” என்றார். அந்த கல்யாணத்தைக் குடும்பத்தோடு பார்ப்பது நல்ல தாம் அதற்காகத்தான் இந்த எட்டு பட்டி கிராமமும் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கின்றனர் என்றார். இதைக் கேட்ட மாதவன் அது எப்படி மாமா மரத்துக்கும் மரத்துக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்று ஆச்சரியமாகக் கேட்டான்.
உடனே அனிதாவும் அதானே மரத்திற்கும் மரத்துக்கும் கல்யாணம் செய்து வைத்தால் எப்படி மழை பெய்யும்? மரக்கன்றுகளை நட்டி, மரங் களின் எண்ணிக்கைத் தானே பெருக்க வேண்டும். எங்கள் அறிவியல் பாடத்தில் கூட மரங்கள் நிறைந்த இடத்தில் தான் மேகங்கள் நின்று மழை பொழியும் என்று படித்திருக்கிறேன். அப்பா நீங்களே யோசித்துப் பாருங்கள் மரங்கள் அதிக மாக இருக்கும் இடத்தில் தானே மழை பெய்கிறது . நாம நம்ம ஊரைச் சுற்றியுள்ள மரங்களை எல்லாம் வெட்டி விட்டுதா தறிப்பட்டறைகள், வீடுகள், கடைகள் என ஏராளமான மரங்களை வெட்டி விட்டோம். அது மட்டும் இல்லை பாதைகளை அகலப் படுத்த வேண்டி பாதை ஓரங்களில் இருந்த லட்சக்கணக்கான மரங்களையும் வெட்டி வீழ்த்தி விட்டோம். அதற்கு மாற்றாக மரக்கன்றுகளை நாம் நட்டவில்லை என்பது தானே உண்மை. சொல்லுங்கப்பா இந்த மரங்களுக்கு கல்யாணம் செய்யும் காசில் வீட்டிற்குப் பத்து மரக் கன்றுகளைக் கொடுத்து வளர்க்கச் சொன்னா லாவது கொஞ்ச நாட்கள் கழித்து நம்ம ஊரிலும் மழை பெய்யும். அதை விட்டுவிட்டு இப்படி செய்வது எந்தப் பயனும் இல்லை என்று துடுக்குத்தனமாகக் கூறினாள். இவள் சொல்வதைக் கேட்ட சுந்துருக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. எப்ப பார்த்தாலும் எதைச் சொன்னாலும் அதற்கு ஒரு விளக்கத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கிறாய் நீ பேசாம இரு என்று மகளை அதட்டினார். அப்பா இப்படி சொன்னவுடன் அனிதாவின் அம்மா குறுக்கிட்டு அவள் சொல்வதும் சரிதானே என்றார்.
“நீங்கள் எல்லோரும் கொஞ்ச நேரம் பேசாமல் இருங்கள் இதற்கே இப்படிச் சொல்றீங்க புளியம்பட்டியில் இது போல ஒரு சமயம் பெரும் வறட்சி கண்டபோது கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைத்தார்களாம் பிறகு மழை பெய்ததாம் என்றார். அனிதா மட்டுமல்ல எல்லோருக்கும் உள்ளுக் குள் சிரிப்பு வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சூழ்நிலை சற்று மாறுவதைக் கண்ட அனிதா வின் அம்மா சரி சரி பேசிக்கிட்டே இருந்தா எப்படி? பேசாம வாங்க எல்லோரும் முதலில் சாமியைக் கும்பிடுவோம் என்றார். சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்த அனிதா வுக்கு அப்பா பேசிய பேச்சு திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டே இருந்தது. அறிவியலாலர்கள் சொல்லும் அறிவுபூர்வமான விஷயத்தை நம்புவதா இல்லை அப்பா சொல்வதை நம்புவதா என சிந்தித்தாள். அனிதாவைப் போலவே சுந்தருக்கும் மனதில் மகள் சொன்ன விசயம் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தது. ஏழாம் வகுப்பு தான் படிக்கிறாள் ஆனாலும் அவள் பேசிய பேச்சுக்கள் யாவும் உண்மை தானே. இந்த மாதிரி கல்யாணம் செய்வதைக் காட்டிலும் மரக்கன்றுகளை நட்டி வளர்ப்பது தானே சிறந்தது. சிறுமியாக இருந்தா லும் அனிதா மிகவும் புத்திசாலி தான். படித்த படிப்பை யதார்த்த வாழ்வில் பொருத்திப் பார்ப்பது தானே சரி. அப்பொழுது வீட்டிற்கு வெளியில் ஆட்டோ ஒன்று அடுத்த வாரம் இதே நாளில் மறு பூசை நடை பெறும் என்ற அறிவிப்பைக் கேட்டு சுந்தர் நிம்மதி அடைந்தார். பஞ்சாயத்து தலைவரிடம் சொல்லி மறு பூசை அன்றாவது கோயிலுக்கு வரும் அத்தனை பேருக்கும் மரக்கன்றுகள் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
அப்போது அப்பா... அப்பா... என்று அழைத்த படி அனிதா அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். வருத்தத்தோடு அப்பா நான் கோவிலில் ஏதா வது தவறாகப் பேசி இருந்தால் மன்னித்து விடுங் கள் என்றாள். அப்போது மக்களிடத்தில் சுந்தர் அப்பாவை நீதான் மன்னிக்கணும் செல்லம். நீ சொன்னது தான் சரி ஊர் சொல்கிறது என்பதற்காக நாம் எதையும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை என்று அப்பா பேசும் பேச்சைக் கேட்ட அனிதா விற்கு நிம்மதியாய் இருந்தது. எங்கு தன்னை அப்பா தவறாகப் புரிந்து கொண்டாரோ என்று எண்ணிய அவளுக்கு அப்பொழுதுதான் மகிழ்ச்சியாக இருந்தது. சந்தோஷத்தில் அப்பாவை கட்டி அணைத்து முத்த மிட்டு லவ் யூ பா என்று சொல்லிவிட்டு துள்ளிக் குதித்து விளையாட சென்றாள்.