tamilnadu

ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம்

அவிநாசி, ஜன.1- அவிநாசி அருகே ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட அங்கன்வாடி மையத் தினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வியாழ னன்று துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், புதுப்பா ளையம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம் பாளையத்திலி ருந்து வளையபாளையம் வரை 3.5 கி.மீ. சாலைப் பணிகள் ரூ.48.15 லட்சம் மதிப்பீட்டிலும்,  வஞ்சிபாளையம் முதல்  கவுண்டம்பாளையம் வரை 2.9கி.மீ ரூ.35.90  லட்சம் மதிப்பீட்டில் உள்ள சாலை பணிகளை  வியாழனன்று ஆ.ராசா எம்.பி., துவக்கி  வைத்தார். இதனைத் தொடர்ந்து தெக்கலூர் ஊராட்சி தெக்கலூரில் கட்டப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தானியக் கிடங்கு, சென்னிமலை பாளையத்தில் ரூ.9.08  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ஆ.ராசா எம்.பி., திறந்து வைத் தார். மேலும், ஏரிப்பாளையம் அருகே கௌசிகா நிதி தடுப்பணையை பார்வையிட் டார்.  இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி, திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் க.பத்மநாதன், திருமுருகன்பூண்டி ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.ஆர்.பழனிச்சாமி, சர வணன் நம்பி, சாந்திபாபு, த.சந்தோஷ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.