tamilnadu

img

அழிந்துவரும் காடர் பழங்குடி சமூகமும்… சிபிஎம் மாநாட்டின் பெண் பிரதிநிதியும்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலைக் குன்றுகளில் அடர் வனங்க ளில் வாழ்ந்து வருகிறது காடர் பழங்குடி சமூகம்.  தனித்த கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், மொழி  என தனித்துவ மான அடையாளங்களைக் கொண்டவர்கள்.  இவர்கள் இந்தியாவில்  ஆனைமலைக் குன்றுகளில் மட்டுமே வசிக்கி றார்கள். ஆனைமலையின் தொடர்ச்சியாக உள்ள டாப்சிலிப் அருகில் உள்ள கேரளாப் பகுதியில் உள்ள பரம்பிக்குளம், அதிரப்பள்ளி பகுதியிலும் வசிக்கின்றனர்..  சமீபத்தில் கல்லார்குடி பகுதியில் வசித்துவந்த காடர் மக்களுக்கு பட்டா வழங்க மறுத்து அவர்களை வனத் துறை வெளியேற்ற முயற்சித்தது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, மலைவாழ் மக்கள் சங்கம் ஆகியவற்றின் தொடர் போராட்டத்தால் வன உரிமைச் சட்டத்தின்படி அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.  கடந்த ஜனவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் மருதமலை பொதிகை அரங்கில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட 23 ஆவது மாநாட்டில் ஆனை மலை ஒன்றியக் குழு செயலாளர் தோழர் பரமசிவத்தை சந்தித்து கல்லார்குடி பட்டா போராட்டம் குறித்தும் காடர் மக்கள் குறித்தும் விசாரித்தேன்.

அப்போது அவர், காடர் சமூகத்தைச் சார்ந்த பெண் தோழர் ஒருவர் மாநாட்டில் பிரதிநிதியாக கலந்துள்ளார் என எனக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். அவரைப் பார்த்துப் பேச வேண்டும் என்றேன்.   உடனே அந்தத் தோழரை வர வழைத்து எனக்கு அறிமுகப்படுத்தினார். டாப்சிலிப் அரு கிலுள்ள எருமைப்பாறை என்ற கிராமத்தில் வசிக்கும் தனலட்சுமி என்ற தோழர் அவர்.  ஆனைமலை ஒன்றி யக்குழு தோழர்கள் பழங்குடி மக்கள் நலனுக்காக   தொடர்ந்து பணியாற்றியதின் பயனாக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார்.  காடர் மக்கள் குறித்து அவரிடம் பேசினேன்.  அவர்களுடைய மொழி தனித்துவமான மொழியாக இருந்தது. இருளர் மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தாக இருந்தது.   மலையாளமும் இந்தியும் கொஞ்சம் கலந்திருந்தது. ஆனைமலை பகுதி கேரள எல்லையில் அமைந்திருப்பதால் மலையாளம் கலந்திருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இந்தி வார்த்தைகள் எப்படி கலந்திருக்கும் என்பது புரியவில்லை. இவர்களு டைய பூர்வீகம் குஜராத் மாநிலம், ஆகவே இந்தி வார்த்தை கள் கலந்திருக்கலாம் என தோழர் பரமசிவம் விளக்கி னார்.  காடர் மற்றும் மலை மல்சர் ஆகிய பழங்குடி இனங்கள் தற்போது அழிந்துவரும் பழங்குடி இனங்களாக அறி விக்கப்பட்டுள்ளது.  அதுபற்றி விசாரித்தேன்.  ஆனை மலைக் குன்றுகள் முழுவதும் 178 காடர் குடும்பங்கள் வசிக்கின்றன.  சுமார் 6000 காடர் மக்கள் இருப்பார்கள். ஆனால் இதுவரை ஒருவர் கூட கல்லூரிக்கு சென்ற தில்லை. ஒருவர் கூட  அரசு வேலையில் சேர முடிய வில்லை.  சில இளைஞர்கள் வனத்துறையில் வேட்டைத் தடுப்புக் காவலர்களாக பணிபுரிகிறார்கள். சில பெண்கள் டாப்சிலிப் பகுதியில் Eco Tourisum  சூழல் சுற்றுலா பிரி வில் உதவியாளர்களாகப் பணிபுரிகிறார்கள். இதைத் தவிர கல்வியின் அடிப்படையில் ஒருவர் கூட அரசுப் பணியில் இல்லை. சத்துணவு ஊழியர், டிரைவர் போன்ற பணியிலாவது சேர்ந்துள்ளார்களா என்று கேட்டேன். அது வும்கூட இல்லை. அரசின் திட்டங்கள் எதுவும் இன்னும் இவர்களைச் சென்று சேரவில்லை.   புலிகள் காப்பகம் என்ற பெயரில் இவர்களைத்தான் காட்டைவிட்டு விரட்ட வேண்டும் என வனத்துறையும் அரசும்  என்ஜி ஓ (NGO) க்களும்  கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கின்றன. பழங்குடி மக்கள் இல்லையென்றால் அது காடாக இருக்காது. கார்ப்பரேட் பூங்காவாக மாறிவிடும்.  அது தான் அரசின் நோக்கம்.  இந்தப் பழங்குடி இனங்களை அழிவிலிருந்து காப் பாற்ற வேண்டும். அவர்களின் மேம்பாட்டில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்தச் சமூகத்தைச் சேர்ந்த சிறார்கள் இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கல்வியைத் தொடர்வதையும் அதன் பிறகு கல்லூரி செல்வதையும் உறுதிப்படுத்தவும் ஒரு திட்டத்துடன் நீங்கள் செயல்பட வேண்டும் என்று தோழர் பரசிவம் அவர்களிடம் சொன்னேன்.

 அதற்கு அவர் ஏற்கனவே இந்திய மாணவர்  சங்கத்  தோழர்கள் துணையுடன் பள்ளிக்கூடங்களில் படிக் கும் பழங்குடி சிறார்கள் குறித்து தரவுகள் சேக ரித்துள்ளோம். நீங்கள் சொன்னதுபோல் அவர்கள்  பள்ளிப்படிப்பை தொடர்ந்து கல்லூரியில் சேரும்வரை அவர்களுக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். மகிழ்ச்சியாக இருந்தது.  ஆனைமலை ஒன்றியத் தோழர்கள் இவ்வாறு பழங்குடி மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றியதன்  பய னாகத்தான் அந்த மக்களிலிருந்து ஒருவர் மாவட்ட மாநாட்டில் பிரதிநிதியாக கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  இதுமட்டுமல்ல சமவெளியில் வசிக்கும் இறவாளர் என்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒரு இளைஞர், ஒரு பெண் உட்பட மூவர் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர். ஆனைமலை ஒன்றியக்குழு தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.  மேலும் ஜக்கியின் ஈஷா யோகா மையத்திற்கு எதி ராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து தொடர்ந்து நம்முடன் இணைந்து போராடி வரும் இரு ளர் சமூகத்தைச் சார்ந்த  முட்டத்துவயல் முத்தம்மா அவர்களும் தொண்டாமுத்தூர் ஒன்றியக்குழுவின் சார்பாக மாவட்ட மாநாட்டில் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.  தொண்டாமுத்தூர் ஒன்றியத் தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.  காடர் இல்லையேல் காடு இல்லை.  காடு இல்லை யேல் மழை இல்லை.  தண்ணீர் இல்லை.  - மு.ஆனந்தன்