tamilnadu

img

கம்பம் அருகே பழமையான ஈமக்கல் கண்டுபிடிப்பு

தேனி, ஜன.4- கம்பம் அருகே ஏகலூத்துப் பகுதியில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான ஈமக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. கம்பம் அருகே உள்ள ஏகலூத்துப் பகுதி யில் வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழக நிறுவனர் பாவெல்பாரதி தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் பாலதண்டாயு தம், ஜெ.முருகன், சிவராமன் உள்ளிட்டோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான ஈமக்கல் எனப்படும் பெருங் கல்வட்டம் இருப்பது தெரிய வந்தது. ஒரே தொடர் வரிசையில் கிழக்கு மேற்காக உள்ள மூன்று கல்வட்டங்களில் இரண்டு சிதில மடைந்துள்ளன. கரடுமுரடான ஒழுங்கற்ற கற்களால் அமைக்கப்பட்ட இக்கல்வட்டங் கள் ஒவ்வொன்றும் ஏறத்தாழ 28 முதல் 30 அடி விட்டத்தில் உள்ளது. தரை மண் மேடிட்டுக் காணப்படுவதால் இக்கல் தரைக் குள் இன்னும் கூடுதலாக இருக்க வாய்ப்புள் ளது. வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழக நிறுவனர் பாவெல்பாரதி கூறுகையில், குழுத்தலைவர்களை தாழி அல்லது கற்ப துக்கையில் வைத்து அடக்கம் செய்து, அந்த இடத்தில் ஒழுங்கற்ற கற்களை வட்டமாக அடுக்கி கல்வட்டம் உருவாக்குவது வழக்கம். இக்கல்வட்டங்கள் ஆநிரை கவரும் ஆகோள் பூசலில் ஈடுபட்டு இறந்த வீரர்கள் உடையதாகவோ அப்போது வாழ்ந்த குழு வின் தலைவருக்கு உரியதாகவோ இருக்க லாம். இதனை கன்னிமார் தெய்வமாக இப்பகு தியினர் வழிபட்டு வருகின்றனர். 2ஆயிரத்து 500ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இந்த ஈமச்சின்னங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலே மக்களின் வாழ்விடமும் இருந்தி ருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.