சென்னை, டிச. 13 - வெறுப்பு அரசியலுக்கு எதிராக ‘அன்பிலதனை அறம்’ எனும் கலைப் பயணம் புதனன்று (டிச.13) சென்னை யிலிருந்து தொடங்கியது. இந்தியாவில் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளத்தில் வெறுப்பரசியல் புகுத்தப்படுகிறது. ஜனநாயக வெளி அச்சுறுத்தப்படு கிறது. அரசமைப்புச் சட்டம் சிதைக் கப்பட்டு, கூட்டாட்சித் தத்துவம் பறிக்கப்படுகிறது. சமூக சமநிலை சீர்குலைக்கப்பட்டு, அதிகாரங்கள் ஒன்றியத்தில் குவிக்கப்படுகிறது. இதற்கெதிராக மத நல்லிணக்கம், ஜனநாயகப் பாதுகாப்பு உள்ளிட்ட விழுமியங்களைப் பாதுகாக்க, செப்.23 தொடங்கி ஜன.30 வரை இந்திய மக்கள் நாடக மன்றம் சார்பில் கலைப்பிரச்சாரம் நடைபெற்று வரு கிறது. இதில், கலைஞர்கள், எழுத்தா ளர்கள், அறிவுத்துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து, நாட்டின் பன்மைத்துவத்தை, பன்முகத் தன்மையை வலியுறுத்தி பரப்புரை மேற்கொள்கின்றனர். இதன் ஒருபகுதியாக தமிழ் நாட்டில் மதம், சாதி, பாலின வெறுப்பு ணர்வுக்கு எதிராக ‘அன்பிலதனை அறம்’ (அன்பு செய்யாதோரை அறம் வருத்தும்) என்கிற பெருநெறியை முன்னிறுத்தி கலைப் பயணம் தொடங்கியது. சனாதனத்தை எதிர்த்த போரில் காவியைத் துறந்து, வெள் ளுடை தரித்து, ‘கண்மூடி பழக்க மெல்லாம் மண்மூடி போக’ என்று ரைத்த வள்ளலார் வாழ்ந்த இல்லத்தி லிருந்து கலை பயணம் தொடங்கி யது.
மகத்தான கலைஞர்களின் சங்கமம்
இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா குழுவினரின் திருவருட்பா பாடல்கள், கோவன் குழுவினரின் மக்களிசை பாடல்கள், காம்ரேட் டாக்கீசின் ராப் பாடல்கள், கானா விம லாவின் பாடல்கள், சென்னை கலைக் குழுவினரின் ‘மெய்’ நாடகம் ஆகிய வற்றுடன், இந்திய மக்கள் நாடக மன்றத்தின் தலைவர் பிரசன்னா ஹைக்கோடு கலைப் பயணத்தை தொடங்கி வைத்தார். கவிஞர் அமுதா பொற்கொடி தலை மையில் நடைபெற்ற தொடக்கவிழா, கலைப் பேரணியில் தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, துணைத்தலைவர் ரோகிணி, தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் அறம், பேராசிரியர்கள் வீ.அரசு, நல்லூர் சரவணன், வட சென்னை தமிழ்ச் சங்க செயலாளர் ப.மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து எழும்பூரில் நடைபெற்ற கலைப்பயணத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் கலை, இலக்கிய, நாடக ஆளுமைகள் பங்கேற்றனர். லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தபசி குமரன், விடுதலை கலை இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் யாழன் ஆதி, இஸ்லாம் அறிவு மைய நிர்வாகி லியாகத் அலி கலிமுல்லா, இந்திய ஒற்றுமை இயக்க நிர்வாகி பாலமுருகன் உள்ளிட்டோர் பேசினர். இந்நிகழ்வுகளை நாடகவியலாளர் பிரளயன், சென்னை கலைக்குழு கவின்மலர், தமுஎகச தென்சென்னை மாவட்டச் செயலாளர் அசோக் சிங் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.