tamilnadu

img

குமார், ஆனந்தன் 25வது ஆண்டு நினைவு தினம்

கடலூர்,ஜூன் 26- கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடிய தோழர் குமார், ஆனந்தன் சமூக விரோதிகளால் 1999 ஜூன் 26 அன்று படுகொலை செய்யப்பட்டன. அவர்களது 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி புதுப்பாளையம் குமார், ஆனந்தன் நினை விடத்தில் மலர் தூவி அஞ்சலி  செலுத்தும் நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச்  செயலாளர் கோ. மாதவன் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். ஜி. ரமேஷ் பாபு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பராயன்,  அசோகன், ராஜேஷ் கண்ணன் மாந கர செயலாளர் அமர்நாத்,  மாவட்டக் குழு உறுப்பினர்  கிருஷ்ணன்  இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் மாநிலச் செயலாளர் சிங்கார வேலு, துணைத்தலைவர் செல்வராஜ் மாநகர குழு உறுப்பினர்கள்  ஆனந்த், திருமுருகன், தமிழ் மணி, புதுப்பாளையம் பகுதி தலைவர்கள் மகி (விசிக), மணிமாறன் (அதிமுக), தாமோதரன் (அறிவியல் இயக்கம்) ஆகியோர் கலந்து  கொண்டனர். புதுப்பாளையம் சுப்பிர மணிய சுவாமி கோயில் தெருவில்  25 ஆவது நினைவு தினத்தை ஒட்டி 25 மரக்கன்றுகளை  நட்டனர்.