ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வலுவாக குரல் எழுப்பிய கல்வியாளர்
பேரா. வசந்தி தேவி மறைவுக்கு சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்
சென்னை, ஆக. 1 - டாக்டர் வே. வசந்தி தேவி மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தலைசிறந்த கல்வியாளர்- பெண்ணுரிமை போராளி தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாள ராக, பெண்ணுரிமை போராளியாக, சமூக ஆர்வலராக திகழ்ந்த டாக்டர் வசந்தி தேவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனை யையும் அளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. டாக்டர் வசந்தி தேவி ராணிமேரிக் கல்லூரி யில் பேராசிரியராகப் பணியைத் துவக்கி, பின்னர் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி யின் முதல்வராகவும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் திறம்பட பணியாற்றியவர். அரசுப் பள்ளிகள் பாதுகாப்புக்கு உழைத்தவர் ஆசிரியர் இயக்கம், பெண்கள் இயக்கம், கல்வி உரிமை என பல்துறைகளில் அயராது உழைத்தவர். “பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்” என்ற அமைப்பை துவக்கி அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டியதன் அவ சியத்தை அரசுக்கும் - பொதுமக்களுக்கும் உணர்த்தியவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய காலத்தில் பெண்கள், குழந்தைகளின் உரி மைகள் மற்றும் கல்வி சீர்திருத்தத்தில் அயராது பாடுபட்டவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வலுவாக குரலெழுப்பினார் தமிழக தொழிற்சங்க முன்னோடி சர்க்கரை செட்டியாரின் பேத்தியான டாக்டர் வசந்தி தேவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான ஆதரவாளராக விளங்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் நெருக்கமாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு வலுவாக குரலெ ழுப்பியவர். அவரது மறைவு முற்போக்கு இயக்கங்களுக்கும், கல்வி சார்ந்த அமைப்பு களுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது மகன், மகள் மற்றும் குடும்பத்தின ருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக் கும், கல்வியாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறது. இவ்வாறு பெ. சண்முகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), மாநிலக் குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.