tamilnadu

முசிறி - நாமக்கல் 4 வழிச் சாலைக்கு ரூ.104.54 கோடி ஒதுக்கீடு

திருச்சி,ஜன.29- திருச்சி - சேலம் நெடுஞ் சாலையில் முசிறியில் இருந்து நாமக்கல் வரையி லான சாலையை அகலப் படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கி யுள்ளது. திருச்சி - சேலம் சாலை அகலம் குறைந்து, குறுக லான வளைவுகள் அதிகம் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதை தடுக்க வளைவுகளை நேர் செய்து சாலைகளை அகலப் படுத்த வேண்டும் என்பதை பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முசிறியில் இருந்து நாமக்கல் வரையி லான உள்ள இரு வழிச் சாலையை 4 வழிச்சாலை யாக அகலப்படுத்துவதற் கான விரிவான திட்ட அறிக் கையை தயாரித்தது. அதன் அடிப்படையில், முசிறி - நாமக்கல் இடை யிலான இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருப்ப தாக ஒன்றிய சாலை போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள் ளார். இதற்காக ரூ.104.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.