tamilnadu

img

எண்ணூர் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம்; கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஆதரவு!

சென்னை, டிச. 30 - சென்னை எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையிலிருந்து வெளி யேறிய அமோனியா வாயுக் கசிவால் கடு மையான உடல்நலப் பாதிப்பு ஏற் பட்டுள்ள நிலையில், தங்களின் உயி ருக்குப் பாதுகாப்பு கேட்டு மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை, கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். சென்னை எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் 26.12.2023 அன்று இரவு சுமார் 11.30 மணியளவில் அளவுக்கதிகமாக அமோனியா வாயு கடல் வழியாக வெளிவந்து விபத்து ஏற் பட்டது. அமோனியா வாயு வெளியேறிய தால் அந்தப் பகுதியில் உள்ள பெரிய  குப்பம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல் மயக்கம் ஏற்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். சுமார் 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். கடலில் மீன்களும் செத்து மிதக்கின்றன. மேற்படி கோரமண்டல் உரத் தொழிற் சாலையால் இந்தப் பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக பாதிக்கப்பட்டு வரு கின்றனர். அமோனியா வாயு அதிகமாக வெளியேறும் போதெல்லாம் மக்கள் தொழிற்சாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதும், அதைத்தொடர்ந்து ஆலை நிர்வாகம் அதனைக் கட்டுப் படுத்துவதும், பின்பு வழக்கம்போல அலட்சியம் காட்டுவதும் தொடர்கிறது. இந்நிலையில்தான், மேற்படி விபத்து நடைபெற்ற தினத்தன்று பொதுமக்கள் மேற்படி ஆலையின் முன்பு கூடி, தங்களின் உயிர்ப் பாது காப்பை முன்வைத்து போராடினர். அவர்களில் 22 பேர் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. எனினும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து நடந்த பகுதி யையும், பாதிக்கப்பட்ட மக்களையும், நான்கு மீனவர் கிராம ஊர் தலைவர்க ளையும், கோரமண்டல் தொழிற்சாலை வாயில் அருகில் போராடி வருகின்ற மக்களையும் கடலோர மக்கள் வாழ்வு ரிமை இயக்கத்தின் மாநில ஒருங்கி ணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாநில நிர்வாகிகள் லோகநாதன், ஜெய்சங்கர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், திருவொற்றியூர் பகுதிச் செயலாளர் கதிர்வேல், பொதுத்தொழி லாளர் சங்கத் தலைவர் முத்துசாமி, பகுதிக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி ஆகியோர் நேரில் சந்தித்து போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது பேசிய அவர்கள், “விபத்து நடந்து ஐந்து நாட்களாகியும், போராடிக் கொண்டிருக்கும் மக்களை அரசு அதி காரிகள் யாரும் வந்து சந்திக்கவில்லை  என்பது மிகவும் மோசமான நடைமுறை யாகும். சிறிய அளவிற்கான அமோனி யா வாயு வெளியேற்றத்திற்கே இவ்வ ளவு பெரிய பாதிப்பு ஏற்படும்போது, சுற்றிலும் மீனவ கிராமங்கள் இருக்கும் இடத்தில் 12,600 மெட்ரிக் டன் கொள்ள ளவு திறன் உள்ள மிகப்பெரிய டேங்கர் இருப்பது மக்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்ட அவர்கள், “இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.