tamilnadu

img

அடிக்க அடிக்கத்தான் அம்மியும் நகரும்

மதுரை எய்ம்ஸ் பணிகளை நிறைவேற்றாதது மோடிக்கு அவமானமாகத் தெரியவில்லையா? மதுரை எய்ம்ஸ்க்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். குரல் கொடுக்காதவர் ஒரே  ஒரு எம்.பி.தான். அவரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தில்லை. போராடிக் கொண்டிருந்தால் மட்டுமே எய்ம்ஸ் வந்துவிடுமா என  ஒரு பத்திரிகை எழுதியுள்ளது. சுதந்திரமே போராடியதால்தான் கிடைத்தது. போராடினால் தான் எதுவும் கிடைக்கும். அடிக்க அடிக்கத்  தான் அம்மியும் நகரும் என்பார்கள். மோடி அரசிற்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே போராடுகிறோம். படிக்காமலேயே “மோடி பட்டம் பெற்றுவிட்டார்” எனக் கூறி வழக்கு ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. படிக்காமலேயே பட்டம்  பெற்ற பிரதமர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கண்ணால்  பார்க்காமலேயே படித்து முடித்தவர்களுக்குப் பட்டம் வழங்கினாலும் வழங்குவார். இந்தியாவிலேயே தமிழகம் தான் ஒன்றிய அரசுக்கு அதிக வரு வாய் ஈட்டித் தருகிறது. ஆனால் அவர் தமிழகத்தைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறார்கள். இந்தாண்டு பட்  ஜெட்டில் ரூ.350 கோடியை முழுமையாக ஒதுக்கீடு செய்து எய்ம்ஸ் பணியைத் தொடங்க வேண்டும். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்