tamilnadu

img

அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பணியிடை நீக்கம்

சென்னை, மார்ச் 29- திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய  குற்றவாளிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறை உதவி கண் காணிப்பாளர் (ஏஎஸ்பி)   பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் புதன்கிழமை (மார்ச் 29) குற்றவாளிகளின் பல்லை பிடுங்கிய பல்பீர் சிங் ஐபிஎஸ் அதிகாரி குறித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறுப்பினர்கள் இசக்கி சுப்பையா, நாகைமாலி, ஜவா`ஹிருல்லா, ஜே.ஜி. பிரின்ஸ் , அருள், முகம்மது ஷாநவாஸ், வேல்முருகன் ஆகியோர் சிறப்பு  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து  உரையாற்றிய முதலமைச் சர் மு.க.ஸ்டாலின், “அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. விவகாரத்தைப் பொறுத் தமட்டில், குற்றச் செயலில் ஈடுபட்டு, விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சில ருடைய பற்களைச் சேதப் படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன், சேரன்மாதேவி சாராட்சியர் (உட்கோட்ட நடுவர்) தலைமையில் விசா ரணைக்கு உத்தரவிடப் பட்டு, விசாரணை தொடங் கப்பட்டது. அந்த ஏ.எஸ்.பி.காத்திருப்போர் பட்டி யலுக்கு உடனடியாக மாற்றப்பட்டார்”என்றார். காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்  சம்பவங்களில் எந்தவித மான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது. இந்த விரும்பத்தகாத சம்ப வத்தில் ஈடுபட்ட அம்பா சமுத்திரம் கோட்ட உதவி  காவல் கண்காணிப் பாளரைப் பணியிடை நீக்கம்  செய்ய உத்தரவு பிறப்பித் துள்ளதாகவும் தெரிவித் தார்.

இது குறித்து முழு மையான விசாரணை அறிக்கை வரப்பெற்றவுடன், இச்சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் மீது உரிய மேல்  நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் அவர் உறுதி யளித்தார். திமுக ஆட்சி பொறுப் பேற்ற கடந்த 2 ஆண்டுக ளில், சாதி மோதல்கள், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. அப்படிச் சொல்வதை விட அது தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சியைப் பொறுத்தவரை, காவல் துறை சுதந்திரமாகவும், விரைவாகவும் செயல்பட்டு, கொலையாளிகள் யாராக இருந்தாலும், கொலை செய்யப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அதில்  எந்தவிதமான பாரபட் சமோ, அரசியலோ எது வும் பார்க்காமல், உரிய  விசாரணை மேற்கொள் ளப்பட்டு, கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப் படுகிறார்கள் என்றும் முதலமைச்சர் கூறினார்.