ஒன்றிய அரசுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்
திருத்தம் தேவையில்லை
மதுரை, மே 24 - தொல்லியல் ஆய்வா ளர் அமர்நாத் ராமகிருஷ் ணன் அனுப்பி வைத்திருந்த கீழடி அகழாய்வு அறிக்கை யை 2 ஆண்டுகளுக்கு பிறகு, அவருக்கே திருப்பி அனுப்பிய ஒன்றிய பாஜக அரசு, அதனை மாற்றி எழுத வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்கு அமர்நாத் ராம கிருஷ்ணன் தற்போது பதில் அனுப்பியுள்ளார். அதில், கீழடி அகழாய்வு அறிக்கை யில் கால வரிசைப்படி அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அடுக்குகள் வாரியாகவும், காலவரிசைப்படியும் ஆவ ணங்கள் இணைப்பில் உள் ளன. கீழடி குறித்த வரை படம், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர்ந்தபட்ச தெளிவுத் திறனுடன் வழங் கப்பட்டுள்ளன. இதனால், திருத்தம் தேவையில்லை, என கூறியுள்ளார்.