திருவாரூர், நவ.8- கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகள் பயன்பெறும் வகையில் உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திரு வாரூரில் நவம்பர் 8 வெள்ளிக்கிழ மையன்று மாநிலத் துணைத் தலை வர் அ.து.கோதண்டம் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் ஆ.பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட் டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறைப்பு. அதன் விதிகளை தாறுமாறாக சிதைத்தல் உள்ளிட்ட காரணங்களாக பத்து ஆண்டுக்கு மேலாக கிராமப்புற மக்களின் உயிர்நாடியான ஊரக வேலை திட்டம் சிதைக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நாடு முழு வதும் வேலை அட்டை பெற்றுள்ள 25 கோடி பேர்களில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களின் வேலை அட்டை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 1 கோடி வேலை அட்டைகளை நீக்கி உள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை யால் கிராமப்புற ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள னர். பாஜக அரசின் இந்த நடவடிக்கை யை அகில இந்திய விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் நகர்ப்புற 100 நாள் வேலை திட்டம் மாநில அரசு திட்டமாக உள்ளதை மாற்றி ஒன்றிய அரசின் திட்டமாக செயலாற்றி நகர்ப்புறத்தி லும் 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக வழங்க வேண்டும், கலைஞர் கனவு இல்ல திட்டத் திற்கு தமிழ்நாடு அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பயனாளிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஆகவே உடனடியாக பயனாளிகள் பயன்பெறும் வகையில் உடன டியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.