சென்னை, ஏப்.15- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கைகள் மீது சட்டப்பேரவையில் நடந்த விவாதங்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி பதிலளித்து பேசுகையில், “கடந்த இரண்டு ஆண்டு களில் 47 அறிவிப்புகளை வெளியிட்டோம். அவற்றில் 36 பணிகளை செய்து முடித் துவிட்டோம். 6 பணிகள் ஆய்வில் உள்ளது. ஒன்று மட்டும் சாத்தியமில்லை என்பதால் கைவிடப்பட்டது” என்றார். வீட்டுவசதி வாரிய குடி யிருப்புகள் பெரும்பாலான இடங்களில் பழுதடைந்துள் ளது என்றும் அதனை புதுப்பித்து மறு கட்டுமானம் செய்ய வேண்டும் என்றும் பெரும்பாலான உறுப்பி னர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து ஆய்வு செய்ததில் 10 இடங்களில் உடனடியாக பணிகளை துவக்க வேண்டி யதை அரசு உணர்ந்து இடங் களுக்கு புதிதாக ஒப்பந் தங்கள் கோரப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பகுதிகளிலும் விரைந்து நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் கூறினார். இந்த துறையின் சார்பில் அதிகமாக வீடுகளை கட்டி விட்டோம் என்று பெருமை கொள்வதில் அழகல்ல. அனைத்து குடியிருப்புகள் தரமானதாகவும் இருக்க வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பெரும்பகுதி யிடங்களில் தரமற்றதாக கட்டிக்கொடுக்கப்பட் டுள்ளது என்று குற்றம் சாட்டி னார்.
ஒரு கட்டடம் குறைந்தது 80 ஆண்டுகள் முதல் அதிகப்பட்சமாக 100 ஆண்டுகள் வரைக்கும் உறு தியாக இருக்க வேண்டும் என்பதிலும் அனைத்து வசதிகளும் கொண்டு நவீன மாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் இந்த அரசு கவனம் செலுத்தி வருகி றது. அதற்கு தகுந்தாற் போல்தான் கட்டுமான நிறு வனத்தின் கட்டமைப்புகள் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒப்பந்தமும் கொடுப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது இந்த துறை யின் சார்பில் 138 இடங்க ளில் வாடகை குடியிருப்பு கள் உள்ளன. அவற்றில் 60 இடங்களில் 10 ஆயிரத்திற் கும் மேற்பட்ட வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டிக்கொடுப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக மூன்று இடங்களில் இடித் துள்ளோம். கட்டுமானப் பணிகளை துரிதமாக துவக்கி விரைந்து முடிக்க வும் நடவடிக்கை மேற் கொண்டு வருவதாகவும் கூறினார். தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்,“ அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் மற்றும் விதிமீறல் கட்டடங்கள் பெருவதைக் தடுக்கவும், இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் தனியாக அமலாக்கப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும். மலை யிடப் பகுதிகளில் வளர்ச் சியை ஒழுங்குப்படுத்து வதற்கு தற்போது பயன் பாட்டிலுள்ள பல்வேறு விதி களை மறுஆய்வு செய்து ஒருங்கிணைந்த விதிகள் உருவாக்கப்படும்” என்றார்.