சென்னை, மார்ச் 25 - கோவில் நிலங்களில் உள்ள வீடுகளை இடிப்போம் என அறநிலையத்துறை அச்சு றுத்துகிறது. இதனை கைவிட வேண்டுமென்று அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கோயில் இடங்களில் நீண்ட காலமாக மக்கள் குடியிருக் கின்றனர். நிலங்களை குத்தகை எடுத்து விவசாயமும் செய்து வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பவர்கள், குத்தகை விவசாயிகள், சிறுகடை வைத்திருப்போருக்கு நியாய வாடகை / குத்தகை நிர்ணயம் என்ற பெயரில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. பயனாளிகளால் கட்ட முடியாத அளவிற்கு உயர்த்தப் பட்ட வாடகையை குறைக்க வேண்டும் என்று பயனாளிக ளும், அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கமும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதனிடையே பயனாளிகளை அச்சுறுத்தும் வகையில் அறநிலையத் துறை அறிவிப்புகளை வெளி யிட்டு வருகிறது. இந்நிலையில் அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை வியாழனன்று (மார்ச் 24) சந்தித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்மு கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பி னர்கள் நாகைமாலி, பி.சின்ன துரை, தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்க அமைப்பாளர் சாமி.நடராஜன், நிர்வாகிகள் வ.செல்வம், ஆ.நடராஜன், பிரகாஷ் மூர்த்தி ஆகியோர் மனு அளித்து பேசி னர். அந்த மனுவின் சுருக்கம் வருமாறு: கோவில் இடங்களில் அடி மனை வாடகைதாரர்கள், குத்தகை விவசாயிகள், சிறுகடை வைத்திருப்போருக்கு வாடகையை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வாடகையை முன்தேதி யிட்டு நிலுவை வாடகையாக பல லட்சம் ரூபாயை ஒரே தவணையில் கட்ட வேண்டு மென்று நிர்பந்திக்கப்படுகிறது. பணத்தை கட்டத் தவறினால் வீடுகளை இடிப்போம் என அச்சுறுத்துவதை கைவிட வேண்டும். தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப் பட்டுள்ள புதிய வாடகை நிர்ணயக் குழுவில் பயனாளி களின் பிரதிநிதிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும், உறுப் பினர்களாக இணைூத்திட வேண்டும். வாடகை / குத்தகை நிர்ணயம் செய்யும் போது சம்பந்தப்பட்ட பயனாளிக ளுடன் கலந்தாலோசித்து வறுமைக் கோட்டிற்கு மேல், கீழ் உள்ளவர்களுக்கு ஏற்றார் போல் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசாணை 298 (20.7.2010ன் படி 1.11.2001 தேதி நிலவரப் படி குடியிருப்பு வகையினங்க ளுக்கு வாடகை நிர்ணயம் 0.10 என்று இருப்பதை 0.05 என்றும், வணிக பயன்பாட்டிற்கு 0.30 என்பதை 0.20 என்று மாற்றியமைக்க வேண்டும்.
வீடுகளை பழுதுபார்ப்ப தற்கும், வீடு மற்றும் நிலங்க ளுக்கு மின் இணைப்பு பெறு வதற்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் தடை செய்வதை தவிர்க்க வேண்டும். குத்தகை நிலங்களுக்கு ஆர்டிஆர் பதிவு செய்து தர வேண்டும். புதிய வாடகை நிர்ண யிக்கும் வரை அறநிலைய சட்டபிரிவு 78, 79ஐ பயன்படுத்தி வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்புவது, சீல் வைப்பது போன்ற நடவடிக் கைகளை நிறுத்த வேண்டும். அறநிலையத்துறைஅமைச்சர் அறிவித்தபடி, அரசாணை 318க்கான இடைக்கால தடையை நீக்க அரசின் சார்பில் விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அறநிலையத்துறை சட்டத்தில் உள்ள 79பி திருத்த சட்டதை உடனே ரத்து செய்ய வேண்டும். அறநிலைய சட்டம் 34ன் படி குடியிருப் போர், சாகுபடி செய்வோ ருக்கு அந்தந்த இடங்க ளுக்கான நியாயமான விலையை, தவணை முறையில் பெற்றுக் கொண்டு சொந்த மாக் வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்க ளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சங்கள் இடம்பெற்றிருந் தன.